எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். View RSS

இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
Hide details



தீண்டாத வசந்தம் 20 Jul 2021 5:29 AM (3 years ago)

க்களின் வாழ்க்கை எப்படி சொல்லப்பட வேண்டும், வாழ்வையும், மகிழ்ச்சியையும், திறமைகளையும், அதன் ஊடான கொண்டாட்டத்தையும், அந்த வாழ்வானது தொடர்ந்த வன்முறைக்குக் கீழ் நிகழ்வதையும் சித்தரிப்பது என்பது தீண்டாத வசந்தத்தில் நடக்கிறது. சொல்லப் போனால், ஏழு தலைமுறைகள் (Roots) நாவலை விட "தீண்டாத வசந்தம்" ஒரு படி உயர்ந்தது. அந்த நாவலின் வடிவத்தின் சுவடுகள் இங்கு நிறையவே காணப்படுகின்றன. ஆனால், அதை விட ஆழமாக, உழைப்பின் மேன்மையையும், அதை சுரண்டும் அற்பத்தனத்தையும், அதோட இணைந்த அரசியலையும் அற்புதமாகக் காட்டுகிறது, தீண்டாத வசந்தம்.

எல்லண்ணாவும் சுபத்ராவும், ரூத்தும், ரூபேனும், எல்லண்ணாவின் அத்தை பூதேவியும் அவரது அம்மா அப்பா பிச்சையும், அம்மா லிங்காலுவும், பிச்சையின் மச்சான் எங்கட நரசுவும் என மறக்க முடியாத நபர்கள். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான கோர்வையான கதையோட்டம், பாத்திரப் படைப்பு.

நாகண்ணா, உறுமி சந்திரப்பா, நாகண்ணாவின் அப்பா நாரிகானும், நாரிகானும் மாத்தையாவும் நடத்தும் வீரப் போரும், சுபத்திராவின் ஆவேசப் போரும், எல்லண்ணாவின் பயணங்களும், அவரது பையன் சிவண்ணாவும் சசிரேகாவும், தாது வருஷப் பஞ்சம், கலைகளிலும் இலக்கியத்திலும் நிலவும் ஆளும் சாதியினரின் ஆதிக்கம், வெள்ளைக்கார ஆட்சியிலும் கிருத்துவ மதத்திலும் கூட இடம் பிடிக்கும் சாதி ஆதிக்கம், பஞ்ச நிவாரண பணியிலும் தீண்டாமை, சிவய்யா சிமோன் ஆவது, அதிலிருந்து ரூபன், ரூத், இம்மானுவேல், மேரி, ஜெசி, ரூபி என போராட்ட பாரம்பரியத்தை 300 பக்கங்களில் சொல்லி விடுகிறார், கல்யாண் ராவ்.

சின்னச் சின்ன வாக்கியங்களாக இருப்பதைப் பற்றி கல்யாண் ராவிடம் பத்திரிகை பேட்டியில் கேள்வி கேட்கிறார்கள். ஆமாம், அப்படித்தான் மக்களின் இலக்கியம் உள்ளது என்கிறார். மக்களின் வாழ்வும், போராட்டமும் கதைகளாக பாடல்களாக கட்டப்பட்டு ஊரெங்கும் பரவுகிறது. தாய் நாவலில் பாவெல் கற்றுக் கொண்டு பேசும் உழைப்பின் பெருமையை, இரத்தத்தோடும் வாழ்வோடும் உணர்ந்த சமூக மக்கள் உள்ளுணர்வாக கொண்டாடுகிறார்கள்.

ஆளும் வர்க்க அரசியல், கணக்குப் பிள்ளை, ரெட்டி, பறையர், சக்கிலியர், வண்ணார் என்று சாதிகளின் பெயர்களையும் பொருத்தமாக மொழி பெயர்த்து ஆந்திராவில் நடக்கும் தமிழ்க் கதையாகவே ஆக்கி விட்டார் மொழிபெயர்ப்பாளர். இதே கதை தமிழகத்தின் ஆயிரம் கிராமங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் நடந்திருக்க வேண்டும்.

கர்ணன் படத்தில் தீண்டாத வசந்தத்தின் வரிகளைப் பார்க்க முடிந்தது. தீண்டாத வசந்தத்தில் வரலாற்றின் வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களின் இலக்கியத்தில் இருக்கும் தொடர்ச்சி இந்தப் படைப்புகளிலும் வெளிப்படுகிறது.

1980-களில் லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, சுஜாதா, ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வாசித்து ஒரு கட்டத்தில் பாலகுமாரன் மிகப்பெரிய படைப்பாளியாகத் தெரிந்தார். சென்னைக்கு வந்த பிறகு தமிழ் இலக்கிய உலகின் விளிம்பை எட்டிப் பார்த்த போது, 'இவர்கள் எல்லாம் வணிக எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன்தான் உலகத் தரத்திலான சிறுகதை எழுத்தாளர்' என்றார்கள். அவரிடம் செல்லம்மாவுக்கு வைத்தியம் பார்க்கும் துணிக்கடையில் வேலை பார்க்கும் பிள்ளையின் மேல்சாதி வறுமைக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. 'உலகத்தின் 20 படைப்பாளிகளில் தானும் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் ஜெயமோகனின் கதைகளில் உழைக்கும் மக்களின் வாழ்வு டிராமாத்தனமாக காட்டப்படுவதாகத்தான் இருந்தது.

இவ்வளவு வாசிக்கக் கூடிய பழக்கம் இருந்தும், 2004-ல் வெளியான தீண்டாத வசந்தம் நூலை 18 ஆண்டுகளாக வாசிக்காமல் இருந்தது, வெட்கமாக இருந்தது. பலமுறை நூலின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், தமிழ் புனைவு வாசிப்பதில் சலிப்பும் விலகலும் ஏற்பட்டிருந்தது. வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்று வாழ்க்கை நகர்ந்து விட்டிருந்தது. இலக்கிய வாசிப்பு என்றால் ஆங்கிலத்தில் டால்ஸ்டாய் எழுத்தையும், அமெரிக்க எழுத்துக்களையும், பிரிட்டிஷ் எழுத்துக்களையும் வாசிப்பது என்றாகி விட்டது.

Roots நாவலை கல்லூரியில் படிக்கும் போது, அமெரிக்கன் நூலகத்தில் எடுத்து வாசித்து விட்டேன். War and Peace நாவலை டாடாவில் வேலை செய்யும் போது வாசித்து விட்டேன். அவற்றின் பிரம்மாண்டமும் ஆழமும் பார்த்த பிறகு குட்டையில் மீன் பிடிப்பதாக அமையும் தமிழ் படைப்புகளை (எனக்கு அறிமுகமானவற்றை) படிப்பதில் சலிப்பு ஏற்பட்டது, அதன் மீது ஒரு இகழ்வும் இருந்தது.

எரியும் பனிக்காடு என்ற நாவல் பிடித்தமானது. ஆனால், “தீண்டாத வசந்தம்"தான் தமிழின் நாவல். எப்படி பா. ரஞ்சித்தின் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்க்கையை கொண்டு வந்ததோ, அதில் நிரம்பியிருக்கும் கொண்டாட்டங்களையும், திறமைகளையும், உழைப்பையும், போராட்டங்களையும் சேர்த்து கொண்டு வந்ததோ, மாரி செல்வராஜின் படைப்புகள் எப்படி திரையுலகை புரட்டிப் போட்டனவோ, அது போல புரட்டிப் போட்டிருக்கும் படைப்பு தீண்டாத வசந்தம்.

எஸ் ராமகிருஷ்ணன் 100 தமிழ் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார். அதில் எதுவும் இது போன்ற வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கவில்லை.

கல்யாண் ராவின் எழுத்தில் வாழ்வும் உண்டு, வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அரசியலும் உண்டு. காங்கிரஸ் அரிசன சேவா சங்கம் வருகிறது, அதிலும் ரெட்டிகள் இருக்கிறார்கள், அம்பேத்கரின் விமர்சனம் வருகிறது, கிருத்துவ மதப் பிரச்சாரம் வருகிறது, அதையும் ஆளும் சக்திகள் தமதாக்கிக் கொள்கிறார்கள், யாராலும் கைப்பற்ற முடியாத சக்தியாக கம்யூனிசம் வருகிறது. அதை ஒடுக்குகிறார்கள். ராமானுசத்தையும் போராடும் தோழர்களையும் அடித்து கொன்று விடுகிறார்கள். இம்மானுவேல் நூற்றுக் கணக்க்கான, ஆயிரக்கணக்கான மக்களின் தோழனாக மரிக்கிறான். ரூத்-ஆல் எழுத முடியாத இமானுவேலின் வாழ்க்கையை அடுத்த நாவலாக எழுத வேண்டியிருக்கும் என்கிறார் ஆசிரியர். இமானுவேல், ஜெசி, மேரி, ரூபி இந்தத் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு காவியமாக இருக்கும்.

சாதியை அழித்தொழிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தோழர்கள் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அதில், சாதி ரீதியான வேலைப் பிரிவினை எப்படி தனிநபரை ஒடுக்குகிறது என்று அம்பேத்கர் விளக்குவதைச் சொல்லியிருந்தார்கள். அருந்ததி ராய் மிகச்சிறந்த படைப்பாளியாக இருந்தாலும் அவரால் வாழ்வைச் சொல்ல முடியவில்லை. வாழ்க்கையில் இருந்து விலகிய பாத்திரங்களின் பார்வையிலிருந்துதான் வாழ்வை பார்க்க முடிகிறது, அவரால். அது அவரது தவறில்லை, அவர் பிறந்த இந்திய சமூகத்தின் சாதியக் கட்டமைப்பின் பிரச்சினை.

சங்கிகள் நடத்திய கிளப் ஹவுஸ் விவாதத்தில், ‘பிராமணனான என்னை பூசை செய்ய விடவில்லை' என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அதைச் சொல்லி, கோயில்களில் பிற சாதியினர் அர்ச்சகர் ஆக முடியாது என்று நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். “என்னை ஏன் பூசை செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்" என்று கொதிக்க முடியவில்லை அவருக்கு. இது ஒரு மனித விரோத, முன்னேற்றத்துக்கு விரோதமான கட்டமைப்பு

அதை மிகப் பிரமாதமாக, வரலாற்றோடு அதன் அநீதிகளோடு, அதன் ஓட்டங்களோடு கொண்டு வந்திருக்கிறது, தீண்டாத வசந்தம். அதை இன்னொரு முறை படித்தால்தான் முழுமையாகப் புரியும். பரியேறும் பெருமாள் படத்தை 2 முறையோ 3 முறையோ பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போது அது ஒரு புதிய வாழ்வைக் காட்டியது.

பா ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜூக்கும் கல்யாண் ராவுக்கும் வணக்கங்கள். வாழ்வின் திரையை விலக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

தாய் நாவலையும் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பாவெலும் அவனது அம்மாவும் தொழிலாளர்களும் தொழிற்சாலையும், தோழர்களும் அம்மாவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அது சோசலிச யதார்த்தவாத படைப்பாம். அப்படி என்றால் கல்யாண் ராவின் படைப்பை என்னவென்று சொல்வது?

ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழருக்கும் "சாதியை அழித்தொழிப்பது" மட்டுமின்றி "தீண்டாத வசந்தமும்" கட்டாய பாடமாக இருக்க வேண்டும். அரசியலையும் வாழ்வையும் அவை கற்றுக் கொடுக்கின்றன.


Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

சாதி பற்றி வினவின் கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம் 3 Sep 2019 2:52 AM (5 years ago)

A. நடைமுறை

"புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இல்லை" - என்ன செய்ய வேண்டும், லெனின் (பக்கம் 25, பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்த்தது)

வினவு, ம.க.இ.க-வின் நடைமுறை என்பது புரட்சிகரமான நடைமுறையாக இல்லாததற்குக் காரணம் அவர்களது சாதி பற்றிய கோட்பாடு (மட்டுமின்றி இன்னும் அடிப்படையான கோட்பாடுகளும்) மேம்போக்கானது, தவறானது. எனவே, வினவு, ம.க.இ.வின் நடைமுறை (களத்தில் தோழர்களின் தீரமான போராட்டங்கள்) புரட்சிகரமான இயக்கமாக மாறாமல் தேங்கிப் போயிருக்கின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தவறான கோட்பாடும், 40 ஆண்டுகளாக அதை பரிசீலித்து சரி செய்யத் தவறிய கோட்பாட்டு தலைமையும்தான்.

இல்லை என்றால் ம.க.இ.க-வின் கடந்த கால நடைமுறை போராட்டங்கள், சாதி ஒழிப்புப் பற்றிய அதன் கோட்பாட்டோடு எப்படி தொடர்புடையனவாக இருந்தன என்று சொல்லுங்கள்? அவை அந்தக் கோட்பாட்டுக்கு எப்படி வலு சேர்த்தன அல்லது அதை மேம்படுத்த உதவின என்று விளக்குங்கள். அப்படி எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

அதனால்தான், வினவு, ம.க.இ.க சாதி எதிர்ப்பு அரசியலை பேசுகின்ற, நடைமுறையில் ஈடுபடுகின்ற எல்லோரையும் முத்திரை குத்தி அவமதிப்பதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

B. ரஞ்சித் பற்றி வினவு இங்கு துலக்கமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர் "தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும்" செலக்டிவாக பேசுகிறார் என்று.

இந்த அலட்சியப்பார்வையின் அடிப்படை எது? சாதி குறித்த சித்தாந்த ஓட்டாண்டித்தனமா? இல்லை சாதி ஆதிக்க பார்வை மேலெழுந்ததா? இரண்டுமேதான். முன்னது பின்னதை மேலெழுவதற்கான காரணமாக இருக்கிறது.

சாதி பற்றிய வினவின் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது? அரை நிலப்பிரபுத்துவம் என்ற அதன் கோட்பாட்டு முடிவு எவ்வளவு அபத்தமானதோ அவ்வளவு அபத்தமானது.

முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை முறைகளைப் பற்றி ஆய்வு செய்ய "இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம்" என்ற நூல் மார்க்சின் குறிப்புகளை எடுத்துக் கொள்கிறது. மார்க்சின் அந்தக் குறிப்புகளில் இந்திய சமூகத்தின் தனிச்சிறப்பு அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.*

a. முதலில் மூன்று வகை சொத்துடைமைகளுக்கு இடையேயான வேறுபாடு

"1. நிலத்தில் தனிநபர் சொத்துடைமை இல்லை. வெறும் அனுபோகம் மட்டுமே உண்டு என்கிற முறையில் சொத்துடைமை தனிநபரது சமூக வாழ்வால் பெறப்படும் சமூகச் சொத்துடைமையாக இருப்பது. [இந்தியா மற்றும் பிற ஆசியபாணி சமூகங்களின் சொத்துடைமை முறை]

2. அரசு மற்றும் தனியார் சொத்துடைமை என்று அக்கம்பக்கமாக இரட்டைச் சொத்துடைமை வடிவம் இருப்பினும் தனியார் சொத்துடைமைக்கு முன்நிபந்தனையாக அரசு சொத்துடைமை இருப்பது. எனவே குடிமகன் மட்டுமே ஒரு தனி உடைமையாளர், ஆனால் அவரது சொத்துடைமை தனியாகவும் இருப்பது. [ரோமானிய பழங்குடி சமூகங்களின் சொத்துடைமை முறை]

3. இறுதியாகத் தனிச்சொத்துடைமைக்கு துணையாக மட்டுமே சமூகச் சொத்துடைமை இருப்பது. தனிச்சொத்துடைமையே சமூகத்துக்கு அடிப்படையாகவும், உறுப்பினர்கள் கூடும் பொழுதும் பொதுத்தேவைகளின் போதும் மட்டுமே சமூகம் உண்மையில் நிலவுவது. [ஜெர்மானிய பழங்குடிகளின் சொத்துடைமை முறை]

- ஆகிய இந்த வெவ்வேறு வடிவங்களிலான சமூக அல்லது பழங்குடி உறுப்பினர்களின் ஓரிடத்தில் குடியேறிய பழங்குடி நிலத்துடனான உறவு பழங்குடியின் இயற்கையான குணாம்சங்கள் மீது ஒரு பகுதியாகவும், உண்மையில் பழங்குடி நிலத்தின் உடைமை செலுத்துவதில், பலனை அனுபவிப்பதில், பொருளாதார நிலைமைகளின் மீது ஒரு பகுதியாகவும் சார்ந்து நிற்கிறது.

உடைமை செலுத்துவதை, பலனை அனுபவிப்பதை தட்பவெப்பநிலை, நிலத்தின் தன்மைகள், அதைப் பயன்படுத்தும் முறை, பகைமையான அல்லது அண்டைப் பழங்குடியுடனான உறவுக் குடியேற்றங்களினால் ஏற்படும் திருத்தங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் போன்றவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன."

(இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், பக்கம் 58 - படிப்பதற்கு வசதியாக வாக்கியங்களை பிரித்து, வரிசை எண் தரப்பட்டுள்ளது, சதுர அடைப்புக் குறிக்குள் எனது குறிப்புகள்)

இதில் 1-ல் சொல்லப்படுவது இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை, 2-ல் ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை, 3-ல் ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை. இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

b. குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு "முதலாளித்துவ உற்பத்திக்கு முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்தின்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது".

இதற்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு (சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு "மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்"

எனவே, இந்தப் பகுதியில் மார்க்ஸ் எழுதியுள்ள குறிப்புகளின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தையும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவை மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் போது இந்த்க் குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

c. இந்திய சாதி முறை பற்றி

1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் [வம்சாவழி கணங்கள்] மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய [படிநிலை] வரிசை ஆகும், அதில் [கணங்கள்] ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. கணங்களுக்கிடையே திருமண உறவு உரிமை இல்லை, கணங்கள் மிகவும் ஏற்றத்தாழ்வான சலுகைகளைப் பெற்றவை. [கணங்கள்] ஒவ்வொன்றும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட, மாற்றிக் கொள்ள முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச - 409)

(சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறை. இந்த வாக்கியம் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூலில் இடம் பெறவே இல்லை!)

2. "[அடிமை முறை, பண்ணையடிமை முறை ஆகியவற்றுக்கு உரிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது" (குருண்ட்ரிச 433) [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது. ஆனால், இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற நூல் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்கிறது.]

3. "பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறு சமுதாயங்களின் மேல் நிற்கும் உச்சபட்ச அதிகாரம் [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோற்றமளிக்கிறது.  உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்" (குருண்ட்ரிச 404)[இதில் இந்திய சமுதாயப் பொருளாதரப் படிவம் அரசனுக்கு நிலவுடைமை சொந்தமாக இருப்பதை மட்டும் வலியுறுத்துகிறது. பரம்பரை வழி பாத்தியதை பெறும் "சமுதாயங்களைப்" பற்றிய பரிசீலனைக்கு உள்ளே போகவில்லை.]

d. இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவம் என்ற ஆவணம் இது போன்ற குறிப்புகளை சொல்லி விட்டு

"ஆசியச் சொத்துடைமை வடிவம், மறுஉற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் மட்டுமல்ல, எங்கெல்ஸ், லெனின் ஆகியோரும் தெளிவாகவே விளக்கியுள்ளனர். பழம்பண்டு ஜெர்மானிய, ஸ்லாவினிய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய சொத்துடைமை வடிவங்கள் மற்றும் உற்பத்தி முறைகளில் ஒன்றுதான் ஆசியச் சொத்துடைமை வடிவம் மற்றும் உற்பத்தி முறையாகும். சில பிரத்தியோகமான காரணங்களினால் இந்த வடிவமும் முறையும் எடுத்திருப்பினும், உலகெங்கும் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய வடிவங்கள், முறைகளின் சாராம்சத்தில் இருந்து வேறுபாடானதோ, விதிவிலக்கானதோ அல்ல" (பக்கம் 105)

“சத்திரியர், பிராமணர், வைசியர், சூத்திரர், சண்டாளர் ஆகிய வர்ணங்கள் ஐரோப்பாவில் நிலவிய அரசு உயர்குடி, பிரபுத்துவ உயர்குடி, நிதி ஆதிக்க உயர்குடியான பாட்ரீஷியன்கள், உழைக்கும் நகர்ப்புற பிளெபியன்கள் மற்றும் விவசாயிகள் போன்ற சில பிரிவு வர்க்கங்கள் அடங்கிய ஒரே வகையினரான சமூக எஸ்டேட்டுகளையே குறிக்கும். சாதி அடிப்படையிலான குலத்தொழில்கள், குடிசைத் தொழில் மற்றும் விவசாயத்தின் ஐக்கியத்தைப் பராமரித்த வேளையில், வர்ண அடிப்படையிலான வைசிய சமூகப் பிரிவு, பண்ட உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சிக்கான கூறுகளைப் பெற்றிருந்ததையே காட்டுகிறது” (பக்கம் 110)

“இந்தியச் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பே கிடையாது என்பதில்லை. அதேபோல் பொதுச்சொத்துடைமை அடிமைமுறையையும் மறுப்பதற்கில்லை” (பக்கம் 109)

“நிலப்பிரபுத்துவத்தின் சாராம்சம் தனிச்சொத்துடைமையோ, கைத்தொழிலும் விவசாயமும் வேறு வேறாக வளர்வதோ மட்டுமல்ல; அதன் பிரதானமான அம்சம் உழைப்பாளர் நிலத்தோடும் பிற உற்பத்திச் சாதனங்களோடு பிணைக்கப்பட்டிருப்பதுதான்; சாதிய அமைப்பு முறை, பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மூலம் சமூகத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதோடு, அதன் மூலம் நிலத்தோடும் உழைப்பாளனை பிணைத்திருக்கிறது” (பக்கம் 110)

என்று முடிவு செய்கிறது.

இவ்வாறு, 'இந்தியாவின் சாதி முறை என்பது ஐரோப்பாவின் சமூக எஸ்டேட்டுகளில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை', 'இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இருந்தது, பொதுச்சொத்துடைமை அடிமை முறை இருந்தது', எனவே 'இந்தியாவுக்கும் ஐரோப்பிய சமூகங்களுக்கும் வேறுபாடு இல்லை' என்று முடிவு செய்கிறது அந்த ஆவணம். அதன் அடிப்படையி்ல இந்திய சமூகத்தை அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்று வரையறுக்கிறது. சாதி பற்றிய யதார்த்தத்தை திரை போட்டு மூடுகிறது.

சாதி பற்றி மார்க்ஸ் கொடுத்திருக்கும் குறிப்புகளை பின்பற்றி அம்பேத்கரின் எழுத்துக்களையோ, அதற்குப் பிந்தைய வரலாற்று அறிஞர்களின் படைப்புகளையோ கருத்தில் கூட எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. அதன் பிறகு 1990-களில் பெரும் அளவில் வெளியிடப்பட்ட ஆய்வுகளை "பின் நவீனத்துவம்", "மார்க்சிய விரோதம்" என்று தாக்கிக் கொச்சைப்படுத்தி ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.

இவ்வாறாக, வினவு குழுவினர் சாதி (இந்திய சமூகம்) பற்றிய கோட்பாட்டில் 1980-ல் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல், இன்று வரை வறட்டுவாதிகளாகவே தொடர்கின்றனர்.

இது வினவு பரிதவிப்புடன் பரிசீலிக்க வேண்டிய‌ விஷயம். குறைந்தபட்சம் தன்னை இன்னமும் நம்பி வந்தடையும் வாசகர்களுக்கு நேர்மையாக இதைப் பற்றி வினவு பேசியிருந்திருக்க வேண்டும். மாறாக, "நீ‌ பெரிதா நான்‌ பெரிதா", "யார் சுத்தமான‌‌ கம்யூனிஸ்டு" என ரத்த பரிசோதனை செய்யும் வகையில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பின்குறிப்பு : என்னைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகள் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

* இது தொடர்பான மார்க்சின் முழுக் குறிப்புகளையும் படிக்க விரும்புபவர்களுக்கு https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm , https://www.marxists.org/archive/marx/works/1857/grundrisse/ , https://www.youtube.com/watch?v=lIx2tEweLeE]

குருண்ட்ரிச மேற்கோள்கள் நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. (பக்க எண்கள் மார்க்சிஸ்ட் இன்டெர்நெட் ஆர்கைவ்-ன் பி.டி.எப் கோப்புடையவை)

https://www.vinavu.com/2019/08/26/vinavu-q-and-a-about-director-pa-ranjith-cpi-cpm-parties-and-tamil-groups/#comment-534503 -க்கு மறுமொழி

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

சாதிய பிரச்சனை, வினவின் பிரச்சனை 29 Aug 2019 4:00 PM (5 years ago)

1. கடந்த காலத்தில் ம.க.இ.க, வி.வி.மு தோழர்கள் களத்தில் நடத்திய வீரியமான போராட்டங்களை யாரும் மறக்க முடியாது, மறுக்கவும் முடியாது. நீங்களும் கார்த்திகேயனும் கொடுத்த பட்டியலுடன் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்களை, குறிப்பாக 11 இசைப் பேழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், பின்னர் வினவு மூலம் தி.மு.க/தி.க நீர்த்துப் போக வைத்து விட்ட பெரியாரின் பார்ப்பனீய எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்த பணியை, குறிப்பாக 2014 தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலை செயலூக்கத்துடன் எடுத்துச் சென்றதை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

2. இங்கு அது இல்லை விவாதம். வினவு ரஞ்சித் பற்றிய தனது பதிலில் சொல்லியிருப்பது, “தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது. இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.”

அதாவது ‘இந்தியாவின் சாதிய பிரச்சனை பற்றி கற்பது, கற்று ஆய்வு என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்’ என்கிறது வினவு. ஆனால், வினவின் அமைப்பு ரீதியான சாதி பற்றிய ஆய்வும் கோட்பாடும் மிகவும் மேலோட்டமானது; மூலதனம் நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் எழுதிய Grundrisse என்ற முதல் பிரதியின் (first draft) குறிப்புகளை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்பட்டது. (பார்க்கவும் – இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்).

அந்த நூலில் மார்க்ஸ் எழுதிய குறிப்புகள் முதலாளித்துவ கூலி உழைப்பாளிக்கும் அதற்கு முந்தைய சமூகங்களில் உழைப்பாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை காட்டுவதற்கானவை. ஆனால், அதன் ஊடாக மார்க்ஸ் முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமையில் ரோமானிய, ஜெர்மானிய, இந்திய வடிவங்களுக்கு இடையேயான வேறுபாட்டை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதில் இந்திய வடிவத்தின் தனிச்சிறப்புகளைச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து ஆரம்பித்து இந்தியாவில் சாதி பற்றிய பருண்மையான ஆய்வை செய்திருக்க முடியும்.

ஆனால், 1980-களில் எழுதப்பட்ட அந்த ஆவணம் அத்தகைய ஆய்வு எதையும் செய்யவில்லை. 1940-களுக்கு முன்பே அம்பேத்கர் செய்து முடித்து விட்ட சாதி பற்றிய ஆய்வுகளை பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவின் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் சாராம்சத்தில் ரோமானிய, ஜெர்மானிய சமூகங்களில் இருந்து வேறுபட்டது இல்லை (இயற்கை சார் உற்பத்தி, எளிய மறுஉற்பத்தி, உழைப்பாளி நிலத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது போன்றவை), இந்திய சமூகம் காலனிய ஆட்சிக்குப் பிறகு அரை நிலப்பிரபுத்துவமாக மாறி விட்டது என்று முடித்துக் கொண்டது. சாதியக் கட்டமைப்பு பற்றிய பருண்மையான வரலாற்று அடிப்படையிலான ஆய்வைச் செய்யவில்லை.

அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் வெளியான சாதி பற்றிய பல ஆய்வுகளை “பின்நவீனத்துவம்” “அடையாள அரசியல்” என்று முத்திரை குத்தி புறக்கணித்து தான் எடுத்த “அரை நிலப்பிரபுத்துவம்” என்ற கோட்பாட்டிலேயே இன்று வரை நிற்கிறது வினவு/புதிய ஜனநாயகம்/புதிய கலாச்சாரம். இவ்வாறாக 35 ஆண்டுகளாக அமைப்பாகச் செயல்பட்ட வினவு சாதி பற்றிய ஒரு புரட்சிகர கோட்பாட்டை உருவாக்கத் தவறியிருக்கிறது. [இதைப் பற்றி இன்னும் விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்]

3. எனவே, 1-ல் சொன்ன ம.க.இ.க-வின் பார்ப்பனீய எதிர்ப்பு என்பது திராவிட அரசியல் எல்லையைத் தாண்டி புரட்சிகர பரிமாணத்தை பெற முடியவில்லை. எனவே, சாதி ஒழிப்புக்கான பாதையை உருவாக்கவோ, சாதியப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சக்தியாக உருவெடுக்கவோ முடியவில்லை.

இன்றைய (2019) நிலையில் கூகை, casteless collective போல ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தும் போராட்டத்திலோ, நீலம் பண்பாட்டு மையம் போல சாதி எதிர்ப்புப் போராட்டத்திலோ வினவோ, ம.க.இ.கவோ இல்லை என்பது யதார்த்தம். அதற்குக் காரணம் மேலே சொன்ன கோட்பாட்டு ஓட்டாண்டித்தனம்.

4. சாதி ஆணவம் என்பது தன்னை அறியாமல் கூட ஒருவருக்கு வரலாம். அதுவும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதி என்ற மலம் உள்ளே ஒட்டிக் கொண்டே இருக்கிறது. சாதியை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொண்டு (அம்பேத்கரை படித்து, பரியேறும் பெருமாள் போன்ற படைப்புகளை பார்த்து) தொடர்ந்து சுயவிமர்சனம் செய்து கொள்வதன் மூலம்தான் அதன் துர்நாற்றத்தை துரத்த முடியும். வினவு அதில் தவறியிருக்கிறது என்று சொல்கிறேன்.

5. மற்றபடி, என்னுடைய பின்னூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்து நீங்கள் பட்டியல் இட்டிருக்கும் சொற்களை வாக்கியங்களோடு சேர்த்தே படித்துப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(இது ரஞ்சித் பற்றிய வினவின் கேள்வி-பதில் பதிவில் போட்ட மறுமொழி)

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள் 29 Aug 2019 5:30 AM (5 years ago)

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 4-வது மற்றும் கடைசி பதிவு.

4. வினவின் குறுங்குழுவாத சிந்தனைகள்

//அவரது முயற்சிகளில் பங்கேற்கும் பொதுவானவர்களில் பெரும்பாலானோர் அவரது திரைப்பட பிம்பத்தை மையமாக வைத்து திரையுலகில் தனக்கொரு இடம் கிடைக்காதா என்று வருகின்றனர். இது ரஞ்சித்துக்கும் தெரியாமல் இருக்காது.//

ரஞ்சித்துடன் இருப்பவர்கள் மீது முத்திரை குத்தும் குள்ளநரித்தனம், இது.

//இருப்பினும் யாராக இருப்பினும் தனிநபராக சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்போது முதல் சுற்றில் பெரும் நம்பிக்கையும், உத்வேகமும் இருக்கும். அடுத்த சுற்றுகளில் அந்த நம்பிக்கை சமூக யதார்த்தத்தால் கொஞ்சமோ நிறையவோ விரக்தியடையும். பிறகு ஊரோடு ஒத்து வாழ் என்று ‘முதிர்ச்சி’ அடையும்.//

கூட்டாக சேர்ந்து தீர்வு காண முயற்சித்த வினவு “ஊரோடு ஒத்து வாழ் என்று 'முதிர்ச்சி'” அடைந்திருக்கிறது; பொதுவானவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் இயங்குகிறது. மேலும், புரட்சிகர உள்ளடக்கத்தை மட்டுமின்றி வடிவத்தையும் அத்தகைய பாசாங்கையும் கூட கைவிட்டு ஒரு செய்திப் பெட்டகமாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது.


//இந்தச் சரணடைவு ஏதோ திரைப்பட பிரபலம் மற்றும் தலித் அரசியல் பேசுவோருக்கு மட்டும் நடப்பதல்ல. மார்க்சியத்தை தனிநபராக ‘தூக்கிச் சுமக்கும்’ தனிநபர்களும் கூட இப்படித்தான் வீழ்கிறார்கள். மற்றவர்களை விட மார்க்சிய தனிநபர்வாதிகளிடம் பேச்சும் எழுத்தும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். என்ன இருந்தாலும் ஏதோ கொஞ்சம் ‘தத்துவம்’ படித்தவர்கள் அல்லவா?//

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டத்தில் கோவிந்தா போடும் கோஷ்டிகளாக மாறி விடுவது இது போன்ற அபத்தக் களஞ்சியங்களால்தான்.

முதன்மையான கேள்வி தனிநபரா, அமைப்பா என்பது இல்லை. சரியானதா, தவறானதா, புரட்சிகரமானதா, தேங்க வைப்பதா என்பதுதான் முதன்மையானது. அந்தக் கேள்விக்கு சரியான பதிலை வகுத்துக் கொண்டு நடைமுறையில் செயல்படும் அமைப்புதான் புரட்சிகர அமைப்பாக இருக்க முடியும். அந்த வகையில் தனிநபராக இருந்தாலும் ரஞ்சித் சரியான பிரச்சனையைப் பற்றி பேசுகிறார், சமூகத்தில் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடுகிறார். வினவு அமைப்பாக இருந்தாலும் தவறாக பேசுகிறது, தேக்கத்தை நோக்கிச் செலுத்துகிறது.

"உன் கண்ணுல ஒரு பதட்டம் இருக்கு. காலு தரையில நிக்கல. மொத்தத்துல நீ நீயா இல்ல. முதல்ல நில்லு.அப்புறமா வந்து நீ சொல்ல வேண்டியத சொல்லு" என்று ஒரு படத்தில் சூர்யாவிடம் அவரது காதலி சொல்வது போல வினவு நிதானத்தில் இல்லை என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

சுட்டி

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும் 29 Aug 2019 2:30 AM (5 years ago)

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 3-வது பதிவு.

 3.
சாதிய பிரச்சனையில் வினவின் அமைப்புரீதியான கையாலாகத்தனமும் ரஞ்சித்தின் 'தனிநபர்'வாத செயல்பாடுகளும்

//ரஞ்சித் அப்படிப் பேசுவதற்கு காரணம் பிரச்சினையை அவர் தனிநபர் கண்ணோட்டத்தோடு பார்ப்பதுதான். அதுதான் உடனடியான கோபங்களையும், உடனடியான தீர்வுகளையும், மற்றவர்கள் அதாவது இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. அவரது பிரபலம், இந்தத் தன்மைக்கு இன்னும் வலு சேர்க்கிறது.//

சாதியப் பிரச்சனையைப் பொறுத்தவரையில், எனவே இந்திய சமூக மாற்றத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் கம்யூனிச “இயக்கங்கள் அனைத்தும் சரியில்லை" என்பது உண்மை. அந்த உண்மை அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவிக்கிறதே தவிர, இந்த எண்ணம் ஒரு தனிநபரின் கற்பனையில் தோன்றிய ஒன்று இல்லை.

//சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வென காஸ்ட்லெஸ் கலெக்டிவ் கலை விழாக்கள், கூகை முயற்சிகள் என்று தனது வருமானத்தை போட்டு செய்கிறார். பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார். இதன் மூலம் ஒரு மாற்றை உருவாக்க முடியும் என்று கூட அவர் யோசிக்கலாம்.//

ரஞ்சித்தின் கூகை உருவாக்கியிருப்பது ஒரு ஜனநாயக வெளி. நீலம் பண்பாட்டு மையத்தின் செயல்பாடுகளும், ரஞ்சித்துடன் நேரடி தலையீடுகளும் இன்றைய நமது சமூகத்தில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான முக்கியமான போராட்டமாக உள்ளன.
கச்சநத்தத்திற்கு ரஞ்சித் போனதன் பின்னர்தான் மீடியா வெளிச்சம் வந்தது. சமீபத்தில் கூட ஒரு தலித் சிறுவன் தூக்கிலிடப்பட்ட போது மீடியா வெளிச்சம் கூட கிடைக்கவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இழப்பீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் SC குடியிருப்பு தீக்கிரையாக்கப்பட்ட போதும், நீலம் பண்பாட்டு மையம் இழப்பீடு வாங்கி கொடுத்திருக்கிறது.


35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற கலாச்சார அமைப்புகள் கூகை போன்ற ஒரு ஜனநாயக வெளியையோ, நீலம் பண்பாட்டு மையம் போன்ற சாதிக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாட்டு அமைப்பையே உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை. அதைப் பற்றிய சுயவிமர்சனத்துக்குப் பதிலாக வினவு ரஞ்சித் மீது தனது பொச்சரிப்பை வாரிக் கொட்டுகிறது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பிரிவினரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, வரலாறு முழுவதும் இப்படித்தான் வறட்டுவாதம் பேசிக் கொண்டிருந்தது. ரஞ்சித் அம்பேத்கர், பெரியார் அளவிலான செயல்பாட்டாளரா சிந்தனையாளரா என்பதைப் பற்றி கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் சமூக அக்கறை கொண்ட யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அவரை அணுகும் வினவு பின்பற்றும் முறை சுத்தமான அக்மார்க் இந்திய 'கம்யூனிஸ்டு' முறை. இத்தகைய கண்ணோட்டம் சிபிஐ/எம்களில் நிலவுவது பற்றி வினவு முன்பு பேசியது இப்போது அவர்களுக்கே பொருந்துவது வேறொரு உண்மையைச் சொல்கிறது.

சுட்டி

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம் 28 Aug 2019 11:30 PM (5 years ago)

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அது பற்றிய 2-வது பதிவு.

2. சாதிய பிரச்சனையில் வினவின் அரசியல் ஓட்டாண்டித்தனம்

//சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் இரண்டு ரஜினி படங்கள். அவர் பிரபலமாவதற்கு இது போதும். கூடவே ரஜினி பட இயக்குநர் என்ற அளவில் ஊதியமும் பெறுகிறார். இப்போது அவரிடம் கொஞ்சம் நிதியாதாரம் சேர்கிறது.//

ரஜினி படத்தை இயக்குவதற்கு முன்பே ரஞ்சித் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் (மெட்ராஸ்). அதனால், ரஞ்சித்துக்குக் கிடைத்த பிரபலம் அவருடைய சமூகப் பார்வைக்கும், திறமைக்கும், செயல் திறனுக்கும் கிடைத்த பரிசுதானே தவிர, ரஜினியின் பிரபலத்திலிருந்து ஒட்டிக் கொண்ட ஜிகினா இல்லை.

//இரண்டும் சேர்ந்து அவருக்கென ஒரு தனிநபர்வாதப் பார்வையை உருவாக்குகிறது. பிறகு மேடைகளில் பேசுகிறார்.//
ரஞ்சித், தனது படங்களிலும், பேச்சுக்களிலும் ஒவ்வொரு இடத்திலும் மிகத் தெளிவாக தன்னுடைய அரசியல் அம்பேத்கர் முன் வைத்த சாதி ஒழிப்பு அரசியல் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார், அதில் என்ன தனிநபர்வாதப் பார்வையைக் கண்டது, வினவு?

//வாய்ப்பு வரும்போது தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை எனத் துவங்கி தலித் அடையாள அரசியலை முன்வைக்கிறார். சில சமயம் அவருக்கு வரும் எதிர்வினைகள் கடுமையாக இருக்கிறது. அதனால் அடுத்தமுறை பேசும்போது இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாக பேசுகிறார்.//

"தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் யாரும் எதுவும் செய்யவில்லை" என்பதை மறுக்கும் வகையில் வினவு சார்ந்திருக்கும் அரசியல் கட்சி செய்தவற்றை பட்டியலிட்டால், ரஞ்சித்தின் செயல்பாடுகளோடு அவற்றை ஒப்பிட்டு பரிசீலித்திருந்தால் நேர்மையானதாக இருந்திருக்கும்.

//தலித் மக்கள் தொடர்பான பிரச்சினை பல்வேறு அரசியல் சமூக பொருளாதார விசயங்களோடு தொடர்புடையது. அவற்றோடு களத்தில் இருக்கும் சமூக அரசியல் இயக்கங்களின் பார்வை நடைமுறையோடு தொடர்புடையது.//

அதாவது அரசியல், சமூக, பொருளாதார விஷயங்கள் எல்லோருக்கும் புரியாதாம். வினவு அரசியல், சமூக, பொருளாதார விஷயங்களை புரிந்து கொண்டு நடைமுறையோடு தொடர்புடைய பார்வை வைத்திருக்கிறார்களாம். அது என்ன புண்ணாக்கு பார்வை என்று சொல்வதற்குக் கூட தெம்பு இல்லை.

//இவற்றை கற்பது, கற்று ஆய்வது என்பது ஒரு தனிநபராக செய்வது வெகு சிரமம்.//
இந்தியாவில் சாதி பற்றி பல்வேறு கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து கும்மி அடித்ததை விட அண்ணல் அம்பேத்கர் தனிநபராக பல மடங்கு அதிகமாகவும், சிறப்பாகவும் கற்று ஆய்வு செய்திருக்கிறார். அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்”, "சாதி ஒழிப்பு" இவற்றின் மீதான ஆய்வு முறையிலான விமர்சனக் கட்டுரை ஒன்றையாவது வினவு காட்ட முடியுமா? அல்லது இந்த அறிவு சாதனைகளுக்கு இணையாக சாதி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று எழுதிய ஆய்வுக் கட்டுரையை (குறிப்பாக அம்பேத்கரின் சமகாலத்தில்) சொல்ல முடியுமா? [இதைப் பற்றி தனியாக விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது]

சுட்டி
கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

வினவின் சாதி-ஆணவம் 28 Aug 2019 8:30 PM (5 years ago)

இயக்குனர், சமூக செயல்பாட்டாளர் ரஞ்சித் பற்றிய வினவின் இந்தக் கேள்வி-பதிலில் (சுட்டி கீழே) சாதி ஆணவமும், வன்மமும், திமிரும், நயவஞ்சகமும் சொட்டுகிறது. அவற்றை 4 பகுதிகளாக பார்க்கலாம்.

1. வினவின் சாதி-ஆணவம்

//இயக்குநர் ரஞ்சித் எப்போதும் சீற்றம் கொள்வதில்லை, தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் என பொதுவெளியில் பிரபலமாகும் சிலவற்றில் மட்டும் சீற்றம் கொள்கிறார். அது சரியா என பார்ப்பதும் அவர் ஏன் அப்படி சீற்றம் கொள்கிறார் என்று பார்ப்பதும் வேறு வேறு இல்லை. சரி, ஏன் சீற்றம் கொள்கிறார்?//

எழுத்தாளர் டோனி மாரிசன் / இயக்குனர் ரஞ்சித்
சாதி தலித் மக்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. அது இந்திய சமுகத்தின் மொத்தத்தையும் காவு வாங்கி வரும் பிரச்சனை. மொத்த சமுகத்தையும் பின் தங்க வைத்திருக்கும் பிரச்சனை.
சாதியப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வக்கற்று இருப்பவர்களுக்கிடையில் அதற்கு முகம் கொடுத்து எதிர்வினையாற்றும் ரஞ்சித்தை தலித் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில், அதுவும் பிரபலமாகும் பிரச்சினைகளில் மட்டும் தலையிடுகிறார் என்று கூறுகிறது, வினவு. அதாவது 'ரஞ்சித்துக்கு சாதியை தவிர வேறு எதுவும் தெரியாதுங்க, எப்ப பார்த்தாலும் அதையே தான் பேசிட்ருப்பாரு' என்கிற சாதி வெறியர்களின் கருத்தைதான் இவர்களும் வேறு வடிவத்தில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சமீபத்தில் கருப்பின மக்களின் வாழ்க்கை பற்றிய இலக்கியங்களை படைத்த அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் பேட்டி ஒன்றை பாருங்கள். (சுட்டி கீழே)
One of my favorite interviews with Toni Morrison. The interviewer asked her when she was going to “substantially” write about white people. Her response? “You can’t understand how powerfully racist that question is, can you?” pic.twitter.com/WFhNMgx7xv
— Paul McCallion (@OrangePaulp) August 6, 2019
"எப்போது வெள்ளையின மக்களைப் பற்றிய இலக்கியத்தை எழுதப் போகிறீர்கள்" என்று டோனி மாரிசனிடம் கேட்கிறார், பத்திரிகையாளர். அதற்கு டோனி மாரிசனின் பதில்? “இது எவ்வளவு மோசமான இனவாதம் நிரம்பிய கேள்வி என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?"

"ரஞ்சித் தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் சீற்றம் கொள்கிறார்" என்பது "எவ்வளவு மோசமான சாதிஆணவம் நிரம்பிய கருத்து என்பதை" வினவு உணர முடியாததற்குக் காரணம் உள்ளது.

“நான் ஏற்கனவே மையமான சமூகப் பிரச்சனைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன" என்கிறார், டோனி மாரிசன். அது போல சாதி பிரச்சனைகளுக்கு ஜனநாயக ரீதியான எதிர்வினை ஆற்றுவதன் மூலம் ரஞ்சித் ஏற்கனவே சமூகத்தின் மையமான பிரச்சனைகளுக்காகத்தான் சீற்றம் கொள்கிறார். அதைப் புரிந்து கொள்ள முடியாத வினவுக்கு அது "தலித் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டும்" என்று தெரிகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது சாதிப் பிரச்சனைக்கு “அரை நிலப்பிரபுத்துவம்" என்று வினவு பூசிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய புனுகு.

சுட்டி

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

மார்க்ஸ் : காம்ரேட் நம்பர் 1 - வீடியோ 20 Jun 2019 12:49 AM (5 years ago)

"வாசகர் சாலை" அமைப்பு 15-06-2019 அன்று எழும்பூர் இக்சா மையத்தில் நடத்திய நிகழ்ச்சியில் "காரல் மார்க்ஸ் - காம்ரேட் நம்பர் 1" என்ற தலைப்பில் பேசியது.


 ஒரு தோழர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறந்த தோழர் எப்படி இருக்கிறார்? மார்க்ஸ் தோழர் எண் 1 என்றால் என்ன பொருள்?

ஒரு தோழர் ஒட்டு மொத்த மனிதகுல முன்னேற்றத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும் சிறந்த ஆசிரியராகவும் பணிவான மாணவராகவும், நல்ல நண்பராகவும், இருக்கிறார்.

காரல் மார்க்ஸ் இந்த மூன்று அளவீடுகளிலுமே ஒரு தலைசிறந்த தோழராக, தோழர் எண் 1 ஆக இருக்கிறார்.

மார்க்ஸ் ஜெர்மனியில் பிறந்தவர், பள்ளிப் பருவத்திலேயே மனித குலத்துக்கான வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதுதான் மிகச்சிறந்த வாழ்க்கைப் பணியின் தேர்வு என்று முடிவு செய்கிறார். தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றாலும் அப்போது ஜெர்மனியின் பல்கலைக் கழகங்களில் நிலவிய பிற்போக்கு அடக்குமுறை சூழலைக் கண்டு பேராசிரியர் பதவியை நாடாமல் பத்திரிகையாளராகவும், அரசியல் செயல்பாட்டாளராகவும் வாழ்கிறார். 1840-களின் கொந்தளிப்பான போராட்டங்களின் இறுதியில் கண்டத்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு அடுத்த 35 ஆண்டு வாழ்க்கையை இங்கிலாந்தில் கழிக்கிறார்.

1850 முதல் 1860 வரையிலான கட்டம் அகதியாக, ஏதிலியாக லண்டனுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த அவரது வாழ்க்கை மிகவும் நெருக்கடியான ஒன்றாக இருந்தது.



"பல சமயங்களில் வீட்டில் பத்திரிகை இல்லாமல் எழுதுவதற்குக் காகிதம் கூட இல்லாமல், தபால் தலைகள் இல்லாமல், மருந்து இல்லாமல், டாக்டர்கள் இல்லாமல் வாழ வேண்டியிருந்தது. சில சமயங்களில் மார்க்சினுடைய கோட்டும் டிரவுசர்களும் வட்டிக்கடையி்ல அடகுக்கு இருந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை.

 - 4-வது குழந்தை ஹின்ரிச் குய்டோ 1849 நவம்பர் 5-ம் தேதி பிறந்தான்.

மார்க்ஸ் நோய் வாய்ப்பட்டார். கண் எரிச்சல், உடல்வலி அவரைப் பீடித்தது. 1853-ம் வருடம் அவருக்கு நுரையீரலில் நோய் கண்டது. அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிக்கடி நோயுற்றார்கள்.

ஜென்னி - "எங்களிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாத காரணத்தால்.. இரண்டு அமினாக்கள் வீட்டிற்குள் வந்த வீட்டில் இருந்த கொஞ்ச நஞ்சம் சாமான்களையும் படுக்கைகள், போர்வைகள், துணிமணிகள் ஆகிய அனைத்தையும் இன்னும் என்னுடைய ஏழைக் குழந்தையும் தொட்டிலையும், என்னுடைய மகளின் பொம்மைகளையும் கூட ஜப்தி செய்து விட்டார்கள். குழந்தைகள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வயது நிரம்பிய ஹின்ரிச் குய்டோ நிம்மோனியா காய்ச்சலால் 1850 நவம்பர் 19-ம் தேதி இறந்தாள். பிரான்சிஸ்கா 1851 மார்ச் 28-ம் தேதி பிறந்தது, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக 1852 ஏப்ரல் 14-ம் தேதி இறந்தது. 1857 ஜூலை மாதம் ஜென்னிக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டது.
அவருடைய எட்டு வயது மகன் எட்கார் 1855 ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தான். எல்லோருடனும் நட்புணர்வுடன் பழகுவான். எப்போதும் துரு துரு என்று எதையும் கேட்டு விசாரித்துக் கொண்டிருப்பான், கேள்விகள் கேட்பான். குடும்பத்தில் செல்லப் பிள்ளை.

 "புரட்சிகரமான போராட்டங்களுக்காக என்னிடமிருந்த அனைத்தையும் நான் தியாகம் செய்து விட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதைச் செய்ததற்கான நான் வருத்தப்படவில்லை. நான் மறுபடியும் மற்றொரு வாழ்க்கையைத் தொடங்கினாலும் இதே வேலையைத்தான் செய்வேன். அப்போது நான் திருமணம் மட்டும் செய்து கொள்ள மாட்டேன்". (பக்கம் 463)

இத்தகைய தாங்க முடியாத இழைப்புகளுக்கு மத்தியில்தான் இந்த சமூக முன்னேற்றத்துக்கும் அதன் ஆதார சக்தியாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் தனது விசுவாசத்தை அணுவளவும் விட்டுக் கொடுக்கவில்லை மார்க்ஸ். அவரது கல்வித் தகுதிக்கும், சிந்தனைத் திறனுக்கும், எழுத்தாற்றலுக்கும் அவர் சிறிதளவு வளைந்து கொடுப்பதாக பிற்போக்கு வர்க்கங்களிடம் சென்றிருந்தால் அவரை தங்கத்தால் குளிப்பாட்டியிருப்பார்கள். மனித குல முன்னேற்றத்துக்காக தான் ஏற்றுக் கொண்ட பாதையை இடைவிடாமல் பிடித்து உறுதியாக நின்றார் மார்க்ஸ்.

அத்தகைய கடும் உழைப்பிலும், வாழ்க்கை போராட்டத்திலும் மத்தியில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்தான் மார்க்சின் படைப்புகள். அவை அரசியல் கட்டுரைகள் ஆகட்டும், மூலதனம் நூல் ஆகட்டும், விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாகட்டும். பாரிஸ் கம்யூனில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது பொழியப்பட்ட அவதூறுகளை எதிர்த்து சீறிப் பாய்ந்ததாகட்டும் தொழிலாளி வர்க்கத்தின் எனவே மனித குல எதிர்காலத்தின் தலைசிறந்த தோழராக விளங்கினார் மார்க்ஸ்.

மூலதனத்துக்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூட பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் பார்க்கும் போது அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத லட்சியத்துக்கு அர்ப்பணித்து விட்டார். ஆனால், அதுதான் மிகவும் கௌரவமான வாழ்க்கை என்று இப்போது நமக்குத் தெரிகிறது.

அவர் "கண்ணியமிக்க" அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும். தன்னுடைய அறிவை பயன்படுத்தி முழுப்பலனையும் (அது "பொது நன்மைக்காகவே") அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம். ஆனால், அந்த இலட்சியம் மாணவப் பருவத்தில் இருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை "அறிவாளிகளை" அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்.

மூலதனத்தின் "பட்டம் பெற்ற கைக்கூலிகள்" எத்தனை பேரை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் "சிறப்பித்திருக்கிறார்".

இரண்டாவதாக, தெரியாத, புரியாத விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு நாம் நமது தோழரை நாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு தோழர் மார்க்ஸ்.
காரல் மார்க்சின் மாணவர்களின் மாணவர் எண் 1 என்று சொல்ல வேண்டுமானால் அவர் லெனின்தான். லெனினுக்கு மார்க்ஸ் எப்படி சிறந்த ஆசிரியராக இருந்தார் என்பதைப் பற்றி லெனினின் துணைவியார் க்ருப்ஸ்காயா எழுதியவற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

"எனக்கு மனச் சோர்வு, குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் எனது எழுதும் மேசைதான் புகலிடம். எழுத ஆரம்பிக்கும் போது இருந்த குழப்பம் எழுதி முடித்திருக்கும் போது விலகி தெளிவு ஏற்பட்டிருக்கும்" என்று கலைஞர் கருணாநிதி சொன்னதாக ஒரு இடத்தில் படித்தேன். கலைஞர் கருணாநிதிக்கு தனது சிந்தனைகளை தொண்டர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கிறது.

லெனின் சிக்கலான அரசியல் நிலைமைகள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்வதற்காக மார்க்சுடன் உரையாடுகிறார். மார்க்ஸ் எழுதிய நூல்களை அவர் வாசிக்கவில்லை. அவர் மார்க்சின் படைப்புகள் மூலமாக அவருடன் உரையாடுகிறார்.

லெனின் என்பவர் நமது புத்தகங்களை வைத்துக் கொண்டு நம்முடன் உரையாட முயற்சி செய்வார் என்ற நோக்கத்தில் மார்க்ஸ் தனது படைப்புகளை எழுதியிருக்க முடியாது என்பது உண்மைதான். ஏனென்றால், ஒரு கருத்தைப் படித்து விட்டு அதற்கு எதிர் கருத்தையோ, கூடுதலான கருத்துக்களையோ, உதாரணங்களையோ சிந்தித்து விட்டு நாம் தொடர்ந்து படிக்கும் போது மார்க்ஸ் அந்த கேள்விகளுக்கு விடை அளித்திருப்பதை பார்க்க முடியும். இது மார்க்சின் அதிசய சக்தியால் பிறந்தது இல்லை.

அது அவரது அசுர உழைப்பின் விளைபொருள். ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றால், அது தொடர்பாக கிடைக்கும் அனைத்து கட்டுரைகளையும், விபரங்களையும், கருத்துக்களையும் படித்து விடுகிறார். அந்தக் காலத்தில் உலகின் அறிவுச் செல்வங்களுக்கு எல்லாம் களஞ்சியமாக இருந்த பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் அதற்கு போதுமான ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. அந்த விஷயம் பற்றி பல்வேறு சிந்தனையாளர்கள் சரியாகவும் தவறாகவும் சொன்ன கருத்துக்களை குறித்துக் கொள்கிறார்.

அதன் பிறகு ஒட்டு மொத்த விஷயத்தையும் தனது வலுவான தர்க்கவியல் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரு கோர்வையாக தொகுத்துக் கொள்கிறார். விஷயத்தில் என்ன சாராம்சம் என்று புரிந்து கொள்கிறார்.

அதன் பிறகுதான் எழுத ஆரம்பிக்கிறார் மார்க்ஸ். அது தொடர்பாக பிறர் சொன்ன கருத்துக்கள், புள்ளி விபரங்கள், உதாரணங்கள், சம்பவங்கள் இவற்றை தான் தொகுத்துக் கொண்ட சித்திரத்தில் இணைக்கிறார். இணைத்து முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறார்.

உதாரணமாக, முதல் இந்திய சுதந்திரப் போர் பற்றியும், இங்கிலாந்துக்கும் ரசியாவுக்கும் இடையே நடந்த கிரீமியப் போர் பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றைக் குறிப்பிடலாம். இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக 3 பாகங்கள் "மூலதனம்", 3 புத்தகங்கள் "உபரி மதிப்புக் கோட்பாடுகள்" அடங்கிய புத்தகத்துக்கு முன் தயாரிப்பாக 920 பக்கம் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நூலின் முதல் வடிவத்தை அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற தலைப்பில் எழுதி வெளியிடுகிறார்.

அந்த வடிவம் படிப்பதற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கம் படித்து பலன் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து அந்தப் புத்தகத்தை அந்த வடிவத்தில் எழுதும் திட்டத்தைக் கைவிட்டு மேலே சொன்ன 6 பாகங்களால் ஆன புத்தகங்களாக தொகுக்கிறார். அவற்றில் முத்ல பாகத்தை மட்டும் இறுதி வடிவம் கொடுத்து, சமீபத்திய புள்ளிவிபரங்கள், தகவல்களை சேர்த்து செழுமைப்படுத்தி வெளியிடுகிறார்.

இது மார்க்ஸ் ஒரு மகத்தான ஆசிரியனாக இருப்பதற்கு எப்படிப்பட்ட மாணவராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

(குறிப்புகள் - வீடியோவில் பேசியவற்றை ஒட்டியது. அதன் நேரடி உரை வடிவம் இல்லை.

மேற்கோள்கள் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. என்.சி.பி.எச் வெளியிட்ட தேர்வு நூல்களின் தொகுதி 18-ல் உள்ளது)

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

மகேந்திரா - பிந்தியா - ராகுல் காதல் கதை ft அர்னாப் 20 May 2019 6:30 AM (5 years ago)


Hauterfly பிந்தியா என்ற பெண்ணுக்கும் மகேந்திரா என்ற அவரது நண்பருக்குமான உறவு பற்றிய வீடியோவாக இந்தியாவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையேயான உறவு பற்றி எடுத்திருந்தார்கள்.

இது போன்று மோடியை கலாய்க்கும், விமர்சிக்கும் வீடியோக்கள் கடந்த 1 ஆண்டில் பெருகியிருக்கின்றன. வட இந்திய, மும்பை கலாய்த்தல் தமிழ்நாட்டு கலாய்த்தல்களை தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

அந்தப் பெண் ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டு மகேந்திரா மீது கோபமாக பேசிக் கொண்டே, டெக்ஸ்ட் செய்து கொண்டிருக்கிறாள். மகேந்திரா ஒரு பூக்கொத்து கொண்டு வந்து அவளது முகத்தில் திணிக்கிறான். அதிர்ச்சியடைந்து நிமிர்ந்து பார்க்கிறாள். “நான் இங்க இருப்பது எப்படி தெரியும்" என்று கேட்டால், அவளது ஆதார் அட்டையை காட்டுகிறான்.

கசந்து போயிருக்கும் உறவு பற்றி பேசுகிறாள். "நான் இறைச்சி சாப்பிட்டால் உனக்கு என்ன, என் நாயின் பெயரை ஏன் மாற்றினாய், என் தம்பிக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி விட்டு பின்னர் பக்கோடா போட்டு விற்கச் சொல்கிறாய், அந்த பிரெஞ்சு பெண்ணுடன் நீ பேஸ்புக்கில் பேசியது என்னவென்று கேட்டால் அந்த ஹிஸ்டரியையே அழித்து விட்டாய், என்னை வேவு பார்க்கிறாய், என்னுடைய பிரைவசி என்ன ஆச்சு, 5 ஆண்டுகளாக முயற்சித்தும் முடியவில்லை" என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறாள்.  "என் பணத்திலேயே ஒரு சிலை கொடுத்தாய், அது யாருக்கு வேண்டும். வேறு எதற்காகவது முதலீடு செய்திருக்கலாம்" என்று சொல்கிறாள்.

"உன்னுடைய முன்னாள் காதலனுக்கு எத்தனை தடவை வாய்ப்பு கொடுத்தாய், நான் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறேன், உன் அறையை யார் சுத்தம் செய்தார்கள், என்னுடைய அகமதாபாத் காதலியை விட்டு விட்டு உனக்காக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன், 20-30 மணி நேரம் நான் உழைக்கிறேன், உன் மீதான அக்கறையில்தானே உன்னை கண்காணிக்கிறேன், உன் பக்கத்து வீட்டுக்காரன் மீது நீ கோபமாக இருந்த போது அவர்கள் வீட்டிற்குள் குப்பையைப் போட ஏற்பாடு செய்தது யார்" என்று தனது சாதனைகளை அடுக்குகிறான் மகேந்திரா.

இதற்கிடையில் அர்னாப் கோஸ்வாமி வருகிறார். "பிந்தியா உன்னை anti romantic person என்று declare செய்கிறேன். நீ தில் கே துக்டே துக்டே கேங் என்று குற்றம் சாட்டுகிறேன். மகிந்த்ரா இல்லை என்றால் யார்? மரியாதையாக மகேந்திராவை காதலித்து விடு, இவருக்குப் பதிலாக பப்புவையா தேர்ந்தெடுக்கப் போகிறாய்" என்று மிரட்டுகிறார்.
"ஒரு நியூட்ரல் கருத்தும் தேவைதானே" என்று மகேந்திரா பிந்தியாவை சமாதானப்படுத்துகிறார்.  இரண்டு ஸ்பெஷல் டீ ஆர்டர் செய்கிறார்.

"நீ உண்மையான பிரச்சனைகளிலிருந்து எப்போதும் திசை திருப்பி விடுகிறாய். என்னுடைய முன்னாள் காதலன் சரியில்லை என்பதால்தானே உன்னை தேர்ந்தெடுத்தேன். நான் பார்க்க விரும்பிய படத்தை பார்க்க விட மாட்டேன் என்கிறாய்" என்று படபடக்கிறாள். "நீ செய்வதையெல்லாம் மதிக்கிறேன். ஆனால், அதற்காக மற்ற பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட முடியுமா?" என்கிறாள்.

பேச்சுவார்த்தை மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது, மகேந்திரா தனது காதலின் அளவு 56 இஞ்ச் மார்பு என்று தட்டிக் கொண்டிருக்கும் போது மகேந்திராவுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அமித் அழைப்பு. அவருடன் பேசி விட்டு 5 நிமிடங்களில் வருவதாகச் சொல்கிறார். "நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், நீ எங்கு போகிறாய்" என்று பிந்தியா படபடக்க, அவளது கன்னத்தில் தட்டி விட்டு போய் விடுகிறான்.

பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் ராகுல் என்பவன் கைச் சின்னத்தைக் காட்டிக் கொண்டு அவள் எதிரில் வருகிறான். "மறுபடியும் நீயா" என்று எழுந்து ஓடி விடுகிறாள்.

பா.ஜ.க – காங்கிரஸ் - இந்தியா இந்த உறவை இதை விடச் சிறப்பாக சித்தரிக்க முடியாது. ஹேட்ஸ் ஆப்.

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

அடைக்கலம் தரும் இலக்கியம் - அருந்ததி ராய் 19 May 2019 11:00 PM (5 years ago)


Author Arundhati Roy

ருந்ததி ராய் பென் அமெரிக்காவின் "ஆர்தர் மில்லர் எழுதுவதற்கான சுதந்திரம் (Arthur Miller Freedom to Write)" உரையாற்றியிருக்கிறார். உரையின் தொடக்கத்திலேயே இன்றைய உலக நிலைமையை சுருக்கமாகவும், சிறப்பாகவும் தொகுத்துச் சொல்கிறார்.

"பனிச்சிரகங்கள் உருகிக் கொண்டிருக்கும்போது, பெருங்கடல்கள் சூடாகிக் கொண்டிருக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்தை எட்டிக் கொண்டிருக்கும் போது, பூமியில் உயிர் வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும் சார்புநிலைகளின் மெல்லிய வலைப்பின்னலை நாம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் போது, மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையேயான எல்லையைக் கடந்து செல்லும்படி நமது மலைக்கத்தக்க அறிவாற்றல் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் போது, அதை விட மலைக்கத்தக்க நமது அகம்பாவம் ஒரு மனித இனமாக நாம் நீடித்து வாழ்வதற்கும் பூமி நீடித்து வாழ்வதற்கும் இடையேயான தொடர்பை புரிந்து கொள்ளும் நமது திறனை மங்க வைத்துக் கொண்டிருக்கும் போது, நாம் கலையின் இடத்தில் கணினி நிரல்களை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார செயல்பாடுகளில் பங்கேற்கத் தேவையிருக்காத (எனவே அதற்காக ஊதியம் பெறாத) ஒரு எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கும் போது - இந்த முக்கியமான தருணத்தில்தான் வெள்ளை மாளிகையில் வெள்ளையின வெறியர்களும், சீனாவில் புதிய ஏகாதிபத்தியவாதிகளும், புதிய-நாஜிக்கள் திரண்டு நிற்கும் ஐரோப்பிய வீதிகளும், இந்தியாவில் இந்து தேசியவாதிகளும், பிற நாடுகளில் இவர்களைப் போன்ற கசாப்புக்கார இளவரசர்களும், அதைவிடக் குறைந்த சர்வாதிகாரிகளும் என்ன நடக்கப் போகிறது என்று கணிக்க முடியாத எதிர்காலத்துக்குள் நம்மை வழிநடத்திச் செல்லவுள்ளார்கள்."
என்ன ஒரு கலைஞர். மொழியும், உலகைப் பற்றிய பார்வையும் துள்ளி விளையாடுகிறது.

அமெரிக்கா தாலிபானை அழிப்பதற்காக ஆப்கன் மீது போர் தொடுத்தது, இப்போது தாலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. இதற்கிடையில் ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளை அழித்திருக்கிறது. ஐ.எஸ் என்ற கொடூர பயங்கரவாதக் கும்பலை வளர்த்து விட்டிருக்கிறது. இப்போது அதேபோன்ற பயங்கரவாத பூச்சாண்டி காட்டி ஈரானைத் தாக்குவதற்கு தயாரித்து வருகிறது.

இந்தச் சூழலில் இலக்கியத்தின் இடம் என்ன?

இலக்கியம் என்பதை தான் எப்படி பார்க்கிறேன், எப்படி பழகுகிறேன் என்று விளக்குகிறார். fiction-க்கும், non-fiction-க்கும் இடையே இலக்கியத்தில் வேறுபாடு இல்லை என்றார். தான் அரசியல், சமூகப் பொருளாதார பிரச்சனைகள் குறித்து எழுதியவற்றை பலர் இலக்கியமாகவே பொருட்படுத்துவதில்லை. நீ மறுபடியும் எப்போது எழுதப் போகிறாய் என்று கேட்கிறார்களாம். என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆண்கள் அறிவுரை சொல்வார்களாம்.

ஆனால், பிற இடங்களில், நெடுஞ்சாலைகளுக்கு அப்பால் அவை மொழிபெயர்க்கப்பட்டு படிக்கப்படுகின்றன, துண்டு பிரசுரங்களாக வினியோகிக்கப்படுகின்றன. தாக்குதலுக்குள்ளாகும் காடுகளுக்குள்ளும், கிராமங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் அவை பரவுகின்றன.

எனவே, இலக்கியம் என்பது எழுத்தாளராலும் வாசகர்களாலும் கட்டியமைக்கப்படுகிறது என்கிறார்.

1997-ல் வெளியான The God of Small Things-ல் அவரது கேரள வாழ்க்கை, அயமேனத்தில் குன்றின் மீதிருக்கும் அந்தப் பழைய வீடு, பாட்டியின் ஊறுகாய் தொழிற்சாலை, மீனாச்சல் ஆறு இவற்றின் பின்ணியில் அன்றைய கேரள வாழ்க்கையை சித்தரித்திருக்கிறார். அதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான பகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சாதியம் ஊறிக் கிடப்பதை அம்பலப்படுத்தும் பகுதிகளும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பை ஈட்டியதாம். அந்த நாவலில் சிரியன் கத்தோலிக்க அம்முவுக்கும் பறையர் சாதி வெளுத்தாவுக்கும் இடையேயான காதல் சமூகத்தின் கூட்டு முகச்சுழிப்பை ஈட்டியிருக்கிறது. 5 ஆண் வழக்கறிஞர்கள் அதற்குத் தடை கோரி வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அவரது அம்மா சிரியன் கத்தோலிக்க குடும்பங்களில் பெண்ணுக்கு சம சொத்துரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்றிருக்கிறார். அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஒரு எண்ணப் போக்கு இருந்திருக்கிறது. இதற்கிடையில் நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது உள்ளூர் மலையாளி பெருமையை தூண்டியிருக்கிறது. எனவே, நாவலுக்கு எதிரான  வழக்கை விசாரிக்க வந்த நீதிபதிக்கு ஒவ்வொரு முறையும் நெஞ்சுவலி வந்து அதைத் தள்ளிப் போட்டு விடுகிறார். இறுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அவரது முதல் நாவல் வெளியான ஒரு ஆண்டுக்குள் வாஜ்பாயின் பா.ஜ.க அரசு அணுகுண்டு சோதனை செய்தது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் இதுதான் என்னுடைய நாடு என்றால் நான் பிரிந்து செல்கிறேன் என்று ஒரு கட்டுரை (The Endo of Imagination) எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன எதிர்வினை வந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள் என்கிறார். அது முதல்தான் இந்திய தேசியவாதம் ஒரு அடாவடி வடிவத்தைப் பெற்றது என்கிறார்.

அணு குண்டின் கொடூரங்களை ஒவ்வொரு எலும்பிலும் உணர்ந்த தலைமுறை அது. வியட்னாமில் ஏஜென்ட் ஆரஞ்ச் போட்ட செய்திகளை பார்த்து வளர்ந்தவர். அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் 1000 பக்கங்கள் வந்து விட்டனவாம்.

கடைசியில் The Ministry of Atmost Happiness நிகழ்ந்தது. அதில் குடும்பங்களில் இருந்து துரத்தப்பட்டு விட்டவர்களின் கதை சொல்லப்படுகிறது. வீட்டின் கூரை பிய்ந்து போனவர்களின் கதை.

இலக்கியம் நமக்கு அடைக்கலம் தருவதால் அது நமக்குத் தேவைப்படுகிறது.

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

ஒரு மின்னல் பார்வையில் கிழக்குக் கடற்கரை இந்தியாவும், வட இந்தியாவும் 12 Apr 2019 9:30 PM (6 years ago)

மார்ச் 24-ம் தேதி இரவு தொடங்கி, ஏப்ரல் 2-ம் தேதி மாலை வரை சென்னை - விஜயவாடா - விசாகபட்டினம் - புபனேஸ்வர் - ஹவுரா, கொல்கத்தா - தன்பாத் - கயா - அலகாபாத் - டெல்லி - கோட்டா - ரத்லாம் - சூரத் - மும்பை - புனே - சென்னை பயணம்

ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு போனதால் நகர்வில் இருக்கும் மக்கள் பிரிவினரையே முதன்மையாக பார்த்தேன்.

நிம்மதியற்ற, அலைந்து கொண்டே இருக்கும், கடுமையான மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் மக்கள் பட்டாளம் இந்தியாவின் சாரமாக இருக்கிறது.

விவசாயிகளும் சரி முறையான தொழிலாளர்களும் சரி, ஒப்பந்தத் தொழிலாளர்களும் சரி, மாணவர்களும் சரி, நிறைவின்றி தேட்டத்திலும் ஓட்டத்திலும் உள்ளனர். எதை பிடிப்பது, எதை விடுவது, எங்கு போய் வாழ்வது என்ற நிம்மதியின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஓட்டத்தை விஜயவாடாவில் தொடங்கி, விசாகப்பட்டினம், புபனேஸ்வர், ஹவ்ரா, கொல்கத்தா, தன்பாத், கயா, அலகாபாத், காசியாபாத், டெல்லி, கோட்டா, ரத்லாம், சூரத், மும்பை, பாந்த்ரா, புனே, என்று எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இந்த இடங்களில் இந்தியாவின் கிழக்கு மேற்கு பகுதியைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களை பார்க்க முடிந்தது.

டம் விட்டு இடம் போய் படிக்கும், படிப்பில் திருப்தி இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் -
  • விஜயவாடாவில் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் 4-வது ஆண்டு படிக்கும் வாரங்கல் பையன் - மேற்படிப்பு போக வேண்டும்
  • எம்.பி.பி.எஸ் முடித்து அமெரிக்கா போக முயற்சித்துக் கொண்டிருக்கும் சுவிக்ஞன் இந்தியாவையும் அவனது பெற்றோரையும் வெறுக்கிறான்
  • லக்னோவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் தென்னிந்தியாவின் உணவு பழகாமல் சிரமப்படுகிறான்
  • புபனேஸ்வர் ரயிலில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் படிக்கும் பிரதீக் nutritionist ஆக விரும்புகிறான், 
  • இன்போசிஸ்-ல் வேலை செய்யும் பாலாவுக்கு புபனேஸ்வரை தவிர வேறு எங்காவது போய் வேலை செய்ய வேண்டும் என்று தவிப்பு. 
இன்னும் பலர் இடம் விட்டு இடம் பெயர்ந்து படிக்க, வேலை செய்ய போயிருக்கின்றனர்.
  • புபனேஸ்வர் பேருந்தில் சந்தித்த ஒரு மாணவர் சென்னையில் சி.டி.சி5 விப்ரோவில் இன்டெர்ன்ஷிப் செய்திருக்கிறார். 
  • சுவிக்ஞன் சி.எம்.சி வேலூருக்குப் போயிருக்கிறார். 
  • வெல் ஸ்பன் நிறுவனத்தில் வாபிக்கு வேலைக்குப் போகும் பையன் உலகத்தைப் பார்த்திருக்கிறான்.
  • ராஜ்குமார் என்ற சூரத்தில் இறங்கிய பையன் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடை விற்பனை செய்வதற்கு ஆள் தேடித் தரும்படி கேட்கிறான். 
  • சென்னை வரும் ரயிலில் கல்புர்கியில் ஏறிய பையனுக்கு 25 வயதுதான். கல்லூரியில் துறைத் தலைவரை அடித்து மண்டை உடைந்து, மூளை வெளியில் வந்து 6 மாதம் சிறையில் இருந்திருக்கிறான். இப்போது கட்டுமான கம்பெனியில் வேலை. இன்னும் 5 ஆண்டுகள் வேலை செய்து விட்டு பின்னர் தன் விருப்பப்படி வாழப் போகிறானாம். 
  • தன்பாதில் அமித், அப்பா கோல் இந்தியா ஓய்வு பெற்றவர், அண்ணன் போக்குவரத்துத் தொழில் செய்து கொண்டிருக்க இவர் சொகுசாக சுற்றிக் கொண்டிருக்கிறார். 
  • தன்பாதில் இன்னும் இரண்டு இளைஞர்கள் இந்தியா விஷன் என்ற கம்பெனி கால் சென்டரில் வேலை செய்கின்றனர். 
  • ரேணிகுண்டாவுக்குப் போகும் பையன் வீட்டில் கிராமத்து டிபன் கடை. அப்பா பக்கவாதம் வந்து படுக்கையில். தம்பி கல்லூரியில். இவன் கடை நடத்த வேண்டும். அட்டெண்டன்ஸ்-க்காக கல்லூரிக்குப் போயக் கொண்டிருக்கிறான். 
இது போக சிறப்புத் திறன் இல்லாத தொழிலாளர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
  • மும்பை - சென்னை ரயிலில் திருவல்லா வரை போவதற்கான டிக்கெட்டுடன் ரயிலில் பயணிக்கும் இளைஞன். கையில் காசு இல்லை, சாப்பிடுவதில்லை. 
  • கோட்டா - ரத்லாம் ரயிலில் சந்தித்த அலகாபாத்துக்கு அப்பால் இருந்து ராஜ்கோட்டுக்கு அப்பால் வேலைக்குப் போகும் இளைஞர்கள், பூரியும் ஊறுகாயும் தொட்டுத் தின்று வயிற்றை நிறைத்துக் கொள்கின்றனர், ஒரு வேளை உணவு, வாய்க்கு ருசியில்லாத உணவு.
  • ஹவுராவில் ரிக்‌ஷாவில் அழைத்துச் சென்று ரூம் காட்டிய இசுலாமிய தொழிலாளி. ஜார்கண்டை சேர்ந்தவர். மோடி, அமித் ஷாவை ஏளனம் செய்கிறார். 
  • புபனேஸ்வரில் ராஜூ என்ற பையன். திருப்பூரில் வேலை செய்திருக்கிறான். ஜார்கண்டை சேர்ந்தவன். புபனேஸ்வரில் அக்கா வீட்டில் இருக்கிறான். ரயிலை தவற விட்டு அபராதம் கட்டியிருக்கிறான். 
  • புனா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த லத்தூர் விவசாயியும் அவரது மகனும். 
நகரங்களுக்குள் சந்தித்தவர்கள்
  • கொல்கத்தாவின் இமிடேஷன் நகை கடை நடத்தும் முன்னாள் ராணு வீரர் 1992-ல் சென்னைக்கு வந்தாராம். ஆவடி heavy ordinance தொழிற்சாலையில் பயிற்சி எடுத்தாராம். இப்போது வெளியில் போவது எல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்.
  • புபனேஸ்வரில் பேருந்து நிறுத்தத்தில் நிழல் தேடி வந்த ஒரு பழுத்துக் கனிந்த வயதான அம்மா, வேகா வெயிலில் ஒரு நடந்து வந்து பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்தார். தண்ணீர் பாட்டிலை கொடுத்ததும், பாட்டில் மூடியை வாங்கி அதில் ஊற்றிக் குடித்தார். இளைப்பாறி விட்டு கிளம்பும் போது தலையில் கைவத்து ஆசீர்வதித்து விட்டுப் போனார்.
    நான் பேசுவது அவருக்குப் புரியவில்லை, அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை. ஆனால், அங்கு ஒரு பிணைப்பு இருந்தது.
தேர்தல் விவாதங்கள்
  • அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒடிசா அரசியல் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் புத்திசாலித்தனமாக பேசிய ஒரு வயதானவர்.
  • மும்பை - சென்னை ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு விவசாயிகள் தேர்தல் பற்றி விவாதத்துக் கொண்டு வந்தனர். சந்திரபாபு நாயுடு பெண்களின் பெயரில் மாதம் ரூ 5,000 அனுப்பியதால் பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருக்கிறது என்று பேசினார்கள் என்று ரேணிகுண்டா கல்லூரி பையன் கூறினான். அந்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 
  • இதைத் தவிர புபனேஸ்வரில் நிதீஷ்குமார் கட்சியின் பிரச்சார வாகனம் ஒன்று. வேறு எங்கும் தெருக்களில் தேர்தல் தீவிரத்தை காணவில்லை. 
  • மோடியைப் பற்றி கயா ரயில் நிலையத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 
தொகுத்துப் பார்க்கும் போது, பா.ஜ.க - இந்துத்துவ அரசியல் வட இந்தியாவில் கேள்வி கேட்பார் இல்லாத ஆதிக்கத்தில் இல்லை. அதை எதிர்த்து கடுமையான எதிர்ப்பு நீரோட்டம் செயல்படுகிறது. அது வெளியில் தலைகாட்டுவதற்கு தயங்குகிறது.

ரகசிய வாக்களிப்பு முறையில், நிச்சயமாக பா.ஜ.கவின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமையும். VVPAT மூலம் யாருக்கு ஓட்டு போட்டாய் என்ற தெரிந்து விடும் என்ற அச்சமும் இருக்கலாம்.

கொல்கத்தாவைத் தவிர கம்யூனிஸ்டுகள் வேறு எங்கு கண்ணில் பட்டனர். தன்பாதில்? டெல்லியில்? ரத்லாமில்? சூரத்தில் - இல்லை என்பதுதான் பதில். அதற்குப் பதிலாக கோயில்களும், பா.ஜ.கவின் மேளாக்களும் நிரம்பி வழிகின்றன.

தனிப்பட்ட அனுபவம்

எந்த இடத்திலும் உடனடியாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற தவிப்பு ஏற்படவே இல்லை. இணைய இணைப்பும், பழகிப் போய் விட்டிருந்த உணவு முறையும், எளிய வாழக்கை முறையும் கிடைத்த வாய்ப்புகளை நிறைவோடு பயன்படுத்தி பயணிப்பதை எளிதாக்கியிருந்தன.

பேச்சுக் கொடுத்தவர்கள் எல்லாம் இயல்பாக நெருக்கமாக பேசினார்கள். வாழ்க்கை விபரங்களை பகிர்ந்து கொண்டார்கள். முக்கியமாக தன்பாதில் அமித், புபனேஷ்வருக்கு அருகில் பிரதீக், வாபியில் வேலை செய்யும் QC தொழிலாளி, ரேணிகுண்டாவில் படிக்கும் மாணவர், கட்டுமானத் துறையில் safety engineer வேலை செய்யும் 25 வயது இளைஞர் என யாரும் தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.

கோட்டாவிலிருந்து ரத்லாம் வரையிலான பயணத்தில் தொழிலாளர்கள் நெருக்கமாகி விட்டார்கள். ரத்லாமில் இறங்க வேண்டாம், வடோதராவில் இறங்கி மும்பைக்கு ரயிலை பிடிக்கலாம் என்று வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ரத்லாம் - சூரத் பாதையில் ராஜ்குமாரும், வாபி பையனும் நெருக்கமாக பேசினார்கள். ரத்லாம் - சூரத் ரயிலில் கூட்ட நெரிசலில் பெண்களும், கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்கார்வதற்கு சண்டை போட்டு இடம் வாங்கிக் கொடுத்தேன்.

ஆள், இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை, தென்னிந்தியர் என்று பலர் ஊகித்துக் கொண்டனர்.

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் - ராஜாவின் மேஜிக், எஸ்.பி.பியின் கண்ணீர் 25 Mar 2019 9:00 AM (6 years ago)

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் என்ற பாடல், மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தை அழவைத்த பாடகர்கள்.

கல்பனா என்ற பாடகியும், ரித்திக் என்ற பையனும் இந்தப் பாடலை பாடுகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் நிபுணர்களாக உட்கார்ந்திருக்கின்றனர்.

இது போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் இசை, பாடல், மெட்டு, சூழல், பார்வையாளர் எல்லாம் மிகச்சிறப்பாக ஒத்திசைந்து விடும் தருணங்களில் இதுவும் ஒன்று. பாடலை அந்தக் குட்டிப் பையன் பாடும்போது எஸ்.பி.பியும் அவரது மகனும் கையைத் தூக்கி விடுகின்றனர். "எப்படிடா இப்படி பாடுகிறாய்?" என்று வியக்கிறார் எஸ்.பி.பி. அவரது கண்களில் கண்ணீர், துடைத்துக் கொள்கிறார்.

“டேய், எங்க மொத்தக் குடும்பத்தையும் அழ வைக்கிற நீ, ஒன்னை பார்த்துக்கறேன். உங்க வீடு நொளம்பூர்லதான இருக்கு, வர்றேன்" என்கிறார் சரண்.

எஸ்.பி.பி "இளையராஜா பற்றி பேசப் போகிறேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"இது போன்ற ஒரு மெட்டை யார் போட முடியும், இதன் ஒவ்வொரு இஞ்சும், ஒவ்வொரு பகுதியும், மிக கடினமான மெட்டமைப்பு, இளையராஜா நீடுழி வாழ வேண்டும்.

இதற்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். அங்க இருக்கிற யாருக்காவது இது என்னென்னு புரியுமா? ஏதோ நல்லா இருக்குன்னு நினைச்சிப்பாங்க. இந்த பாட்டை நானும் ஜானகி அம்மாவும் பாடுவதற்கு எவ்வளவு நேரம் பிடிச்சது. இதில பல சின்னச்சின்ன நுணுக்கங்கள் எல்லாம் வருது, அது ஒவ்வொன்றையும் அவர் விடாமல் பிடித்து பாட வைப்பார். எந்த வாத்தியத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அதை எல்லாம் எவ்வவளவு அனாயசமாக பாடுகிறான் இந்தப் பையன். ஒவ்வொண்ணும் செமி, செமி நோட்ஸ்தான். இந்த மாதிரி ஒரு மெட்டமைப்பு, நாங்க எல்லாம் இந்தப் பாட்டை கஷ்டப்பட்டு பாடி கைத்தட்டல் எல்லாம் வாங்கிட்டோம். இப்போ இந்த சுண்டக்கா பையன் குட்டிப் பையன் வந்து பாடிட்டு போயிட்டான்."

என்று தழுதழுக்கிறார்.

விஜய் டி.வியும், முர்டோக்கின் ஸ்டார்-ம் உலகின் அனைத்து விதமான வணிக நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தினாலும் அதில் பாடுபவர்களின் உழைப்பும், திறமையும், முயற்சியும் நிஜம். ஸ்டார் விஜயும், முர்டோக்கும் இந்தப் பூமியில் பிறப்பதற்கு முன்பும் இது போன்ற திறமைகள் இருந்தன, அவை ஒரு சிறிய வட்டத்தில் அவர்களது குடும்பத்தில் ஊரில் ஒரு சிலரை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. இப்போது அவை முதலாளித்துவ லாப தேடல் அலையில் மிதந்து மிகப்பெரிய மேடைகளில் ஏறுகின்றன. இன்னும் பலரது கலையை ஊக்குவிக்கின்றன.

பாடலை கேட்டு மகிழ்வோம்.

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் 

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

லிடியன் நாதஸ்வரம் - உலக இசை அரங்கில் ஒரு தமிழ்ப் புயல் 23 Mar 2019 9:51 PM (6 years ago)

லிடியன் நாதஸ்வரம் என்ற பையன் அமெரிக்காவில் நடக்கும் World’s Best என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று $10 லட்சம் (சுமார் ரூ 7 கோடி) வென்றிருக்கிறான்.


12 வயது லிடியன் பியானோ மேதையாக இருக்கிறான். ஒரே நேரத்தில் முற்றிலும் வேறுபட்ட இரண்டு மெட்டுகளை வாசிப்பது, அதி வேக கதியில் வாசிப்பது என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வாய் பிளக்க வைக்கிறான்.

ஹேரி பாட்டர் பின்னணி இசை, அதைத் தொடர்ந்து மிஷன் இம்பாசிபிள் இசை, பின்னர் இரண்டையும் ஒரே நேரத்தில் - ஒரு கையால் அதையும், ஒரு கையால் இதையும் வாசிக்கிறான். “Oh my God, you ought to be kidding me” என்று கத்துகிறார் ஒருங்கிணைப்பாளர். அடுத்து ஜூராசிக் பார்க் இசை, தனது கை விரல்கள் தோற்றுவிக்கும் மாயத்தைக் கேட்டு அவனது முகத்தில் குழந்தைத்தனமான குதூகலம், சூப்பர் மேன் அடுத்து.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னாலும் பியானோ வாசிக்க முடியும் என்று ஒரு எளிய வாசிப்பை செய்து காட்டி விட்டு, "impressed?" என்று கேட்க, "ஆம்" என்று அப்பாவி தமிழ் முகத்துடன் பதில் சொல்கிறான், லிடியன்.

மொசார்ட்டின் டர்க்கிஷ் மார்ச் என்ற மெட்டை கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கிறான். ”பியானோவுடன் நிலாவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா வாசிக்க விரும்புவதாகச்" சொல்கிறான்.


flight of the bumble bee என்று ஒரு தேனீ பறக்கும் ஓசையை இசையாக வடிக்கிறான். 108 beats per minute – metronym அமைத்துக் கொண்டு அதை வாசிக்கிறான், நடுவர்களும் பார்வையாளர்களும் உண்மையிலேயே வாயைப் பிளக்கின்றனர். அதன் பிறகு 325 beats per minute

அவனது அப்பாவும் பார்வையாளர் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். லிடியன் ஏ.ஆர் ரஹ்மான் நடத்தும் பயிற்சி பள்ளியில் பயின்றிருக்கிறான்.


விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் போலவே பக்காவான செட், ஒருங்கிணைப்பவர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று நிறைந்த அரங்கத்துக்கு வண்ண வண்ண விளக்குகள் ஒளியூட்டுகின்றன. இறுதிக் கட்டத்தில் முதல் இரண்டு இடத்தில் லிடியனும் உடல் வித்தைகள் செய்யும் குழுவான குக்கிவானும் இருக்கின்றனர். கடைசியில் லிடியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வெற்றி பெறுகிறான்.

லிடியன் முகத்தில் ஒரு புன்னகை கீற்றைத் தவிர பெரிதாக கொண்டாட்டமோ, குதித்தலோ, முட்டி மடக்குதலோ இல்லை. ஆழமான பையனாக இருக்கிறான். அவனது அப்பாவும் அமைதியானவராக இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் சேர்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர், குக்கிவான் குழு ஆரவாரம் செய்து கொள்கின்றனர்.

யூடியூபில் லிடியன் முதலிடம் பெறும் வீடியோவை 21 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். ஆங்கில இந்து பத்திரிகையில் ஒரு செய்தி, scroll.in செய்தி, விகடன் சினிமாவில் ஒரு வீடியோ, ஏ.ஆர் ரஹ்மான் லிடியனை பாராட்டி பேசியிருக்கிறார். டெல்லி, மும்பை ஊடகங்களில் எதையும் காணவில்லை. தமிழ்நாடு, இந்தியாவில்தான் இருக்கிறதா?

லிடியனுக்கு நமது கைத்தட்டல்களையும், பாராட்டுதல்களையும் பரிசாக்குவோம்!

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

இந்துத்துவர்களை புலம்ப வைத்த 3 விளம்பரங்கள் 20 Mar 2019 10:02 PM (6 years ago)

மீபத்தில் புரூக் பாண்ட் ரெட் லேபல் டீக்கான கும்பமேளா விளம்பரமும், சர்ப் எக்செல் டிட்டெர்ஜென்ட் பொடிக்கான விளம்பரமும் இந்துத்துவா படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகின.

சர்ப் எக்செல் விளம்பரத்தில் ஒரு சிறுமி ஹோலி சாயக் கறைகள் பட்டு விடாமல் இசுலாமிய சிறுவனை தொழுகைக்கு மசூதி அழைத்துச் செல்கிறாள். இருவரும் 10-12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். இது லவ் ஜிகாத் விளம்பரம் என்று பக்தர்கள் குரல் எழுப்பினார்கள். சர்ப் எக்செல்-ஐ புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தனர்.



புரூக்பாண்ட் ரெட் லேபல் டீ விளம்பரத்தில் தன் வயதான அப்பாவை கும்பமேளா கூட்டத்தில் தொலைத்து விட்டுப் போக முயற்சிக்கும் மகன் மனம் திருந்துவதைப் பற்றியது. இறுதிக் காட்சியில் அப்பாவும் மகனும் மண்சட்டியில் ரெட்பேல் டீ குடிக்கின்றனர்.


கும்பமேளாவில் பல வயதானவர்கள் அவர்களது குடும்பங்களால் கைவிடப்படுகின்றனர் என்று ஒரு செய்தியையும் அது சொல்கிறது. அன்றாட நுகர்பொருள் சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் போட்டி நிறுவன முதலாளியான பாபா ராம்தேவ் தனது போட்டியாளரை கண்டித்திருக்கிறார். இந்து உணர்வுகளை புண்படுத்தியதற்காக அந்த வெளிநாட்டு பிராண்டை புறக்கணிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலாக அவரது பிராண்டை வாங்க வேண்டுமாம்.

இந்த இரண்டு பிராண்டுகளும் ஹிந்துஸ்தான் யூனி லீவருக்கு சொந்தமானவை.

யூனிலீவரின் பிராண்டுகளை புறக்கணிக்கும்படி சொல்லும் ஒவ்வொரு மெசேஜுக்கும் பதிலாக பலர் அந்தச் சலவை பொடியை கூடுதல் கிலோக்கள் வாங்கப் போவதாக தெரிவித்திருக்கின்றர். சர்ப் எக்செல் விளம்பரத்தை யூடியூபில் 1 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். மொத்தம் 1.28  லட்சம் லைக்குகள், 22,000 டிஸ்லைக்குகள். 5,161 கமென்டுகள்.

"அன்றாட நுகர்வு பொருட்களைப் பொறுத்தவரையில் நுகர்வோர் பிராண்ட் நிறுவனத்தின் மீது சொல்லப்படும் சித்தாந்த ரீதியான குற்றச்சாட்டுக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, அதனால் என்ன வகையான பிரபலமும் சாதகமானதுதான்" என்கிறார்கள் சந்தைப்படுத்தல்  நிபுணர்கள். சென்ற ஆண்டு நைக் பொருட்களை புறக்கணிப்பதாக நடந்த இயக்கத்தைத் தொடர்ந்து அதன் விற்பனை அதிகரித்திருக்கிறது. #metoo விளம்பரத்தைத் தொடர்ந்து ஜில்லெட் பிளேட்டுக்கு எதிரான பிரச்சாரமும் விற்பனையை பாதிக்கவில்லை என்று பி&ஜி சொல்லியிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போன்றது இந்த பிக் பஜார் விளம்பரம். மே 2017-ல் வெளியிடப்பட்ட இதுவும் 1 கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.


இஸ்லாமிய பெண் மருத்துவர், ரம்சான் நோன்பு திறத்தல், சீக்கிய அம்மாவின் அன்பும் நேசமும், பெண் மருத்துவரின் முகத்தில் தோன்றும் வெட்கம் கலந்த புன்னகை - பார்க்கப் பார்க்க திகட்டாத விளம்பரம்.

மதவெறியும், வெறுப்பும், பிரிவினை பிரச்சாரமும் சாதாரண உழைத்துப் பிழைக்கும் மக்களுக்கு அன்னியமானவை என்பதுதான் விஷயம்.

செய்தி ஆதாரம் : Can #Boycott be good for business and brands?

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

சைக்கோ ராட்சசர்கள் - பொள்ளாச்சியில் மட்டும்தானா? 14 Mar 2019 1:30 AM (6 years ago)

ராட்சசன் படம் வந்தது 2018-ல். பொள்ளாச்சி சைக்கோ ராட்சசர்கள் 2012 முதலாகவே தமது வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ராட்சசன் திரைப்படத்திலும் சரி, பொள்ளாச்சியிலும் சரி சைக்கோக்கள் பண்ணை வீடு, பங்களா வீடு, கார் என்று குற்றம் நடத்த வசதியான இடத்தை சொத்தாக வைத்திருக்கின்றனர்.

பணத் திமிரும், அதிகார போதையும், ஆணாதிக்க வக்கிரமும் ஒன்று கலந்த சைக்கோக்கள் பொள்ளாச்சி கிரிமினல்கள். இவர்களால் 7 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தக் கொடூரத்தைக் கண்டு 2019-ல் நாம் பதைக்கிறோம். அந்தப் பெண்கள் வதைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளாக அது நமது கவனத்துக்குக் கூட வரவில்லை, அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூட இல்லை. ஏன்? நக்கீரன் கோபால் சொல்வது போல கடைசியாக புகார் கொடுத்த பெண் தைரியமாக அதைச் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் பல பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்திருப்பார்கள்.

புகார் கொடுத்தால்தான் விசாரிப்போம் என்கிறது போலீஸ். அதாவது, யாரும் புகார் கொடுத்திருக்கா விட்டால் போலீஸ் அதை கண்டு கொள்ளப் போவதில்லை.

இதில் பொள்ளாச்சிக்கு ஏதாவது தனிச்சிறப்பு இருக்கிறதா என்ன? மற்ற ஊர்களில் அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும், அவரது திமிரெடுத்து அலையும் மகன்களும் இல்லையா? பணக்கார தறுதலைகளுக்கு பண்ணை வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையா? அங்கெல்லாம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நமக்கு என்ன உத்தரவாதம்?

"பெண்கள் பாவம் மயங்கி விட்டார்கள், காரைக் கண்டு ஏமாந்து விட்டார்கள், செல்ஃபோன் சனியனை பயன்படுத்தி சீரழிந்து போய் விட்டார்கள்" என்று நக்கீரன் கோபால் உட்பட பலர் புலம்புகிறார்கள். "செல்ஃபோன் வந்த போதே நான் சொன்னேன், இது கையிலேயே இருக்கும் சனியன்" என்று என்கிறார் நக்கீரன் கோபால்.

ராட்சசன் திரைப்படத்தில் செல்ஃபோன், பண்ணை வீடு எல்லாம் காட்டி அந்தக் குழந்தைகளை மயக்கவில்லை, சைக்கோ கொலைகாரன். பள்ளி நிகழ்ச்சிகளில் மேஜிக் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குழந்தைகளை கவர்கிறான். சோப்புக் குமிழ் விட்டே சிறு குழந்தையை மயக்குகிறான். மேஜிக் ஷோக்களும், பெண்கள் பள்ளிக்கு போவதும், சோப்புக் குமிழ் விடுவதும் சனியன்கள் என்று நக்கீரன் கோபால் குமுறினால் எப்படி இருக்கும்?

பிரச்சனை அங்கு இல்லை.

1300 வீடியோக்கள் மொத்தம் இருக்கின்றன என்று நக்கீரன் கோபால் ஒரு புறம் சொல்ல, பாலியல் வீடியோக்களை தேடும் தளத்தில் பொள்ளாச்சி வீடியோ, பொள்ளாச்சி செக்ஸ் வீடியோ என்ற தேடுதல்கள் முதலிடம் பிடித்திருப்பதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்.

"என் இணையம், என் ஃபோன், நான் வீடியோ பார்ப்பேன்" என்று வக்கிரத்தை தேடும் உலகத்தில், "என் பண்ணை வீடு, என் கார், என் பணம் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற நினைப்பு ஆதிக்கம் செலுத்தும் உலகத்தில், "நீதாம்மா பத்திரமா இருந்துக்கணும்" என்றும், "ஆண் குழந்தைகளையும் ஒழுக்கமாக வளர்க்கணும்" என்றும் பேசிக் கொண்டே இருந்தால் போதுமா?

"உன் ஃபோட்டோவை வெளியிட்டு விடுவேன்" என்று மிரட்டி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். "அப்படி யாராவது மிரட்டினால் கவலைப் படாதீர்கள்" என்று பெண்களுக்கும், "பெண்ணுக்கு அறிவுரை சொல்வதை விட்டு ஆண் குழந்தைகளை ஒழுக்கமாக வளருங்கள்" என்று பெற்றோருக்கும் அறிவுரைகள் சொல்கிறோம்.

ஒருவன் காதலிப்பது போல நடித்து பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு பலர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அங்கு காதலனின் அம்மா போல நடிப்பதற்கு ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெல்ட்டால் அடித்து வதைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் நக்கீரன் கோபால் சொல்கிறார். வீடியோக்களின் சில பகுதிகளையும் காட்டுகிறார்.

அந்தப் பண்ணை வீட்டில் வேலை செய்தவர்கள், அந்த சைக்கோ கிரிமினலின் அம்மாவாக நடித்த பெண் இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

புகார் வந்த பிறகும் புகார் கொடுத்தவரை அடிக்கும் வகையில் அ.தி.மு.க காலிகளுக்கு தகவல் சொன்ன போலீஸ்காரர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

“காவி சொந்தங்களே, நமது கூட்டணியை தேர்தலில் பாதிப்பதற்காக இந்தப் பிரச்சனையை கிளப்புகிறார்கள்" என்று பேசும் பா.ஜ.க/பார்ப்பன கும்பலுக்கு என்ன அறிவுரை சொல்ல வேண்டும்?

முகிலன் காணாமல் போனது பற்றி கேட்ட போது "தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க முடியாது" என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாரே. அது போல இந்தப் பிரச்சனையில் "ஒவ்வொரு பண்ணை வீட்டு நிகழ்வுகளுக்கும் நான் பொறுப்பு கிடையாது" என்று சொல்லலாம்.

இவர்களுக்கும் அறிவுரை உண்டா? பெற்றோர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மட்டும்தான் அறிவுரையா?

அந்த சைக்கோ கிரிமினல்களில் ஒருவன் "பல பெண்கள் தனக்கு ஆதரவு" என்றும் வீடியோவில் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். நித்தியானந்தா மடத்தில் கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு ஆதரவு என்று மார் தட்டிக் கொண்டான் அந்த சைக்கோ.

“நமக்கெதுக்கு வம்பு" என்று ஒதுங்கிப் போவது, "என்னை மட்டும் நான் கவனித்துக் கொண்டால் போதும், என் குடும்பத்துக்கு எது நல்லது என்று மட்டும் பார்த்தால் போதும்" என்றும் தினம் தினம் சொல்லிக் கொடுக்கப்படுகிறதே அதற்கும் 7 ஆண்டுகளாக தொடர்ந்த இந்தக் கொடூரத்துக்கும் தொடர்பு இல்லையா?

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் படியாக அவர்களது குடும்பங்களும், வேலை செய்யும் இடங்களும், படிக்கும் இடங்களும் ஏன் இல்லை? பணியிடங்களில் பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக புகார் சொல்ல விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. குடியிருப்புகளில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? கல்லூரியில், பள்ளிக் கூடத்தில் என்ன கமிட்டி அமைக்க வேண்டும்? ஏதாவது பிரச்சனை என்றால் இந்தக் கமிட்டியில் முறையிட்டால் நியாயம்/தீர்வு கிடைக்கும் என்று ஏன் இல்லை?

பொள்ளாச்சி வெளிச்சத்துக்கு வந்து விட்டது, வெளிச்சத்துக்கு வராமல் துன்புறுத்தப்படும் எத்தனை பெண்கள் இந்தக் கொடூர சமூகத்தில் இருக்கிறார்களோ!

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும் 12 Mar 2019 12:23 AM (6 years ago)

தை 21-ம் நூற்றாண்டு உலகமயமான முதலாளித்துவம் பற்றிய ஒரு முழுமையான கோட்பாடாக உருவாக்க வேண்டும் என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார். எப்படி மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை, மதிப்பு விதியிலிருந்து முழுமையாக விளக்கினாரோ, அதே போல இன்று தோன்றியிருக்கும் புதிய கட்டத்தை மதிப்பு விதியின் அடிப்படையில் விளக்க வேண்டும்.

மூலதனம் நூலில் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு நாட்டை எடுத்து்க கொள்கிறார். "வெளிநாட்டு வர்த்தகம், அரசின் செயல்பாடுகள், கூலி உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவாக கொடுக்கப்படுவது இவற்றை எல்லாம் பற்றி நான் பேசப் போவதில்லை, அவற்றை அடுத்தடுத்த ஆய்வுகளில் எடுத்துக் கொள்வோம்" என்று ஒதுக்கி வைத்து ஆய்வு செய்கிறார்.

இன்றைக்கு நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு மையமான விஷயமாக வந்திருக்கிறது. அன்று சரக்கு இங்கிலாந்திலேயே உற்பத்தியாகி இங்கிலாந்திலேயே விற்பனையானது. உற்பத்தி முதலாளியிடமிருந்து விற்பனை முதலாளி உபரி மதிப்பை கைப்பற்றினாலும் அது ஒரே நாட்டுக்குள் நடந்து விடுகிறது. இன்றோ உற்பத்தி முதலாளி இந்தியாவில் இருக்கிறார், விற்பனை முதலாளி அமெரிக்காவில் இருக்கிறார். எனவே, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவில் மதிப்பு விதி செயல்படுவதை பற்றி ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

இதனை ஒரு முழுமையான மார்க்சிய கோட்பாடாக உருவாக்குவதை தனிப்பட்ட ஒருவர் செய்து முடிக்க முடியாது. "நான் எடுத்துக் கொண்டிருப்பது, உற்பத்தி உலகமயமாதலில் மூன்றாம் உலக நாட்டு தொழிலாளர்களின் மதிப்பு அதிகரித்திருப்பது, இதில் மதிப்பு எப்படி கைப்பற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறேன்" என்கிறார். இதை ஒரு ஆய்வறிக்கையாக 2010-ல் எழுதுகிறார். இதை தரவுகள், வாதங்களை, கருத்துக்களை அப்டேட் செய்து 2016-ல் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

மூலதனம் நூலை புரட்டிப் பார்த்தால், ஜான் ஸ்மித், அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு மதிப்பின் உற்பத்தி அறுதி மற்றும் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தி என்ற முதல் பாகத்தின் மூன்று பகுதிகளில் அவர் கவனம் செலுத்துகிறார். இது போக மூன்றாம் பாகத்தில் லாப வீதம் குறைந்து கொண்டு போவது, உபரி மதிப்பு சராசரி லாபமாக மாற்றமடைதல் போன்ற பகுதிகளையும் தனது வாதங்களில் பயன்படுத்துகிறார்.

மூலதனம் நூலின் முதல் பாகத்தின் முதல் பகுதியில் 3 அத்தியாயங்களில் பரிசீலிக்கப்படும் பணம் என்பதும் இன்றைக்கு மார்க்ஸ் பரிசீலித்த நிபந்தனைகளிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறது. மார்க்ஸ், “நான் தங்கச் சரக்கை பணமாக எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்கிறார். தங்கம் என்பது மனித உழைப்பு சக்தியை செலுத்தி உற்பத்தி செய்யப்பட்ட ஒரு சரக்கு. மூலதனம் நூலில் தங்க அடிப்படையிலான பண முறை, வங்கிகளின் செயல்பாடுகள் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது என்றுதான் பரிசீலிக்கப்படுகின்றன. 3-வது பாகத்தில் இங்கிலாந்து வங்கி பணம் அச்சடித்து வெளியிடுவதற்கு குறிப்பிட்ட அளவு தங்கக் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் பற்றி விவாதிக்கப்படுகிறது.

உலகப் பொதுப்பணமாக தங்கத்தை பயன்படுத்தும் நடைமுறை 2-ம் உலகப் போரின் சமயத்தில் மாறுகிறது. அப்போது உலக முதலாளித்துவ நாடுகள் ஒன்று கூடி அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் நிலையான விகிதத்தை வரையறுக்கிறார்கள். $35-க்கு ஒரு அவுன்ஸ் தங்கம் பரிவர்த்தனை செய்து கொள்வதாக அமெரிக்க அரசு உலக நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் டாலரை உலகப் பொதுப்பணத்தை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கிறது. உதாரணமாக, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் தங்கத்தை ஏற்றி அனுப்பத் தேவையில்லை. டாலரை பரிமாறிக் கொள்வார்கள். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், டாலரை அமெரிக்க மத்திய வங்கியிடம் கொடுத்து தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

1970-களில் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், மூலதனத் திரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளினால் அமெரிக்க அரசு, “இனிமேல், டாலருக்கு பதிலாக தங்கம் தருவது என்ற உத்தரவாதத்தை கைவிடுகிறோம். இந்த இரண்டுக்கும் பிணைப்பு இல்லை. 100 டாலர் கொண்டு கொடுத்தால் சில்லறை தருகிறோம். தங்கம் தரப் போவதில்லை" என்று அறிவிக்கின்றனர். 1970-கள் முதல் எந்த நாணயத்துக்கும் தங்க அடிப்படை இல்லை, உலகம் முழுவதும் யூரோ, டாலர், யென், பவுண்ட், சமீபத்தில் சீன யுவான் ஆகிய நாணயங்கள் உலகப் பொதுப்பணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. டாலருடைய முற்றாதிக்கம் நிலவுகிறது.

மார்க்ஸ் எழுதிய முதல் 3 அத்தியாயங்களில் பணம் பற்றி விவாதிக்கப்படுகிறது. அதில் மார்க்ஸ் தவறாக எழுதவில்லை. அன்றைய நிலைமையில் தங்கம் உலகப் பொதுப்பணமாக உள்ளது. சூக்குமமற்ற மனித உழைப்பு உருவேற்றப்பட்ட உடனடி வடிவமாக தங்கம் உள்ளது. காகிதப் பணமும் சுற்றோட்டத்தில் பயன்பட்டது. அப்படி இல்லாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. இன்னும் 10 ஆண்டுகளில் இது மாறுமா என்று தெரியவில்லை, ஆனால், இன்றைக்கு தங்கம் உலகப் பொதுப்பணமாக இல்லாத கட்டமைவுதான் செயல்படுகிறது.

இதே போல மூலதனத் திரட்சியின் நிகழ்முறை, வங்கித் துறை எப்படி செயல்படுகிறது என்று ஆய்வு தேவைப்படுகிறது. பங்குச் சந்தையாகட்டும், அன்னியச் செலாவணி சந்தையாகட்டும், பிட் காய்ன் பற்றிய பிரச்சனை ஆகட்டும், கடன் பத்திரச் சந்தை ஆகட்டும் இவற்றின் கட்டமைவு சிக்கலானதாகவும், பிரம்மாண்டமாகவும் வளர்ந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் இயற்கை வளங்களின் பொருளாதாரம் என்ன. 3 அடி வரை விவசாயம் செய்து கொள்ளலாம் அதற்குக் கீழ் இருப்பது முதலாளிகளுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். இதில் மீத்தேன் எடுக்க லைசன்ஸ் கொடுங்கள் என்று ஒரு இடத்தில், இன்னொரு இடத்தில் இரும்புத் தாது எடுக்க மலையை கேட்கிறார்கள், அலுமினியம் எடுக்க கவுத்தி வேடியப்பன் மலை வேண்டும் என்கிறார்கள்.

இந்தப் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது. இது ஏதோ ஆய்வுத் துறை ஆர்வத்துக்கானது மட்டும் இல்லை. இதைப் புரிந்தால்தான் நாம் யார் யார் எங்கு நிற்கிறார்கள். ஆலைத் தொழிலாளியின் பங்கு என்ன, சிறு விவசாயியின் நிலை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் சிறு உடைமையாளர்கள் அழிந்து போவது அவசியமானது என்ற கோட்பாடு எல்லாம் பழைய காலத்தில் எழுதி வைத்தவை. இன்றைக்கு அது அப்படியே பொருந்துமா? சிறு விவசாயிகள் இருக்கிறார்கள். அவர் 8 வழிச்சாலையை எதிர்த்து நிற்கிறார். ஒருவர் அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார். இன்னொருவர் நீங்கள் பெருவீத உற்பத்திக்கு எதிராக நிற்கிறீர்கள், முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள், நீங்கள் பிற்போக்குவாதி என்கிறார்.

இவ்வாறாக, நாம் எல்லோரும் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 4 கண் தெரியாத நபர்கள் யானையை பார்க்க போனார்களாம். ஒருவர் காதை தடவிப் பார்த்து விட்டு யானை முறம் போல இருக்கிறது என்றாராம். இன்னொருவர் காலை தடவிப் பார்த்து விட்டு இல்லை இல்லை யானை தூண் போல இருக்கிறது என்றாராம். இரண்டு பேரும் விவாதம் செய்து கொள்கிறார்கள். முறம் போலத்தான் இருக்கிறது, தூண் போலத்தான் இருக்கிறது என்று அடித்துக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்ற யானை என்னவாக இருக்கிறது என்று காட்டியது மார்க்சின் பணி. மார்க்ஸ் கற்றுக் கொண்டு 21-ம் நூற்றாண்டில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு எப்படி உள்ளது, எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சப் பிரைம் நெருக்கடி பற்றி பேசுகிறோம். மார்க்சிய அமைப்புகள் எழுதிய கட்டுரைகள் பலவற்றில் நமது புரிதல் மேலோட்டமாக இருக்கிறது. வீட்டுக்கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை, கவிழ்ந்து விட்டது என்ற அளவில் புரிந்து கொண்டிருக்கிறோம். இந்த நிதித்துறைக்கான கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு படிப்புகளை படித்தவர்கள் முதலீட்டு வங்கிகளை இயக்குகிறார்கள். இந்தக் கட்டமைவுகள் புரிந்து கொள்ளாமல் உலக முதலாளித்துவத்தை புரிந்து கொள்வது எப்படி?

இதைப் புரிந்து கொள்ளாமல் நாம் பண மதிப்பு நீக்கம் பற்றி எப்படி பேச முடியும். பண மதிப்பிழப்பு என்பது "நான் அதிகாரத்தில் இருப்பதால் நான் உத்தரவு போட்டு பணத்தை மாற்றி அமைத்து விடலாம்" என்று நினைத்த பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் சிந்தனையின் முட்டாள்தனத்துக்கு நல்ல உதாரணம். "எல்லோரும் பணத்தைக் கொடுங்க என்று அறிவித்தால் எல்லாம் மாறி விடும்" என்று நினைத்தார்கள். பணத்தின் பொருளாதார அடிப்படை பற்றிய ஆரம்பநிலை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் மூலதனம் முதல் பாகத்தைக் கூட படித்திருக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்.

எல்லாவற்றையும் மார்க்ஸ் அல்லது லெனின் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்பது தவறு. மார்க்ஸ் அல்லது லெனின் பிரச்சனைகளை எப்படி பரிசீலித்தார், எப்படி முடிவுகளை வந்தடைந்தார் என்பதுதான் முக்கியமானது. லெனின் அந்த காலத்துக்கு, ரசியாவுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முடிவுகளை வந்தடைகிறார். அவற்றை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் முதன்மையானது.

மூலதனம் நூலில் என்ன சிறப்பு என்றால், அந்நூல் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஒவ்வொரு வாக்கியத்திலும் கற்றுக் கொடுக்கிறது. அதை படித்தால் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான அறிவியல் சிந்தனை முறை வளர்கிறது. அதைப் படிக்க முடியவில்லை, புரியவில்லை என்பதற்குக் காரணம் நமது சிந்தனை முறை தவறாக இருப்பதுதான்.

மேலும், முதலாளித்துவ கட்டமைவு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் உட்பட்டதாக என்றைக்குமே இருந்ததில்லை. மூலதனம் முதல் பாகம் 4-வது அத்தியாயத்தில் மார்க்ஸ் சொல்வது போல, 16-ம் நூற்றாண்டில் உலகச் சந்தையும் உலக வர்த்தகமும் தோன்றியதில் இருந்துதான் நவீன மூலதனத்தின் ஆட்சி தொடங்கியது. இதை புரிந்து கொண்டால்தான் இன்றைய முதலாளித்துவ சமூகம் என்ற யானையை புரிந்து கொள்ள முடியும்.

அதற்கான பொறுப்பு மார்க்சிய அறிஞர்களின் கையில் இருக்கிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 6 (இறுதிப் பகுதி)

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும் 11 Mar 2019 12:21 AM (6 years ago)

த்தகைய குறைவான கூலி, மோசமான பணிச் சூழலில் முன்னணி பிராண்ட் பொருட்கள் உற்பத்தி ஆவதை நியாயப்படுத்துபவர்களி்ல ஒருவர் ஜக்தீஷ் பகவதி என்ற பொருளாதாரவியல் நிபுணர்.

ராணா பிளாசா விபத்துக்கு 6 மாதங்களுக்கு முன்பு அதே டாக்காவில் தஸ்றீன் ஃபேஷன்ஸ் என்ற தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 112 பேர் இறந்து விட்டனர். இது தொடர்பாக ஜக்தீஷ் பகவதி ஒரு கட்டுரை எழுதுகிறார். "உற்பத்தி ஆவது பிராண்ட் பொருளாக இருக்கலாம். ஆனால், பணத்தை கொடுத்து பொருளை வாங்குவதோடு எங்கள் பொறுப்பு முடிந்தது. அவர்கள் சுதந்திர சந்தையில் பேரம் பேசித்தானே உற்பத்தி செய்கிறேன். €1.35 என்ற விலையை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுதானே உற்பத்தி செய்கிறான். அதனால் அவர்கள் நாட்டு தொழிலாளியை அப்படி நடத்தினால் எனக்கு என்ன ஆச்சு? வங்கதேச அரசு என்ன செய்கிறது? அவர்களுக்குத்தான் பொறுப்பு" என்று எழுதுகிறார். ராணா பிளாசா விபத்துக்குப் பிறகும் அதே போல எழுதுகிறார்.

ஆனால், வெறும் பொருளாதார உறவுதான் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று சொன்னாலும், பொறுப்பை தட்டிக் கழிக்க முடியவில்லை. இத்தகைய உற்பத்தி நிறுவன உறவுகளை எப்படி புரிந்து கொள்வது என்று ஜான் ஸ்மித் கேட்கிறார். வங்கதேசத்தில் கடந்த 10-15 ஆண்டுகளில் பொருளாதாரம் நிறைய மாறியிருக்கிறது. முன்பு இருந்தது போல இல்லாமல் ஆயத்த ஆடை உற்பத்திக்காக 5,000 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவற்றில் 45 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 85% பெண்கள். இது தொடர்பாக ஐ.நா நிறுவனங்கள் ஆய்வுகள் செய்துள்ளன.

ஆம்பூரில் உள்ள காலணி தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களில் பெரும்பாலும் பெண்களாக இருப்பார்கள். உழைப்பு பட்டாளத்தை பெண்மயமாக்குவது என்று இதை அழைக்கிறார்கள். பெண்களுக்கு ஆண்களுக்குக் கொடுக்கும் கூலியில் முக்கால் பங்கு கொடுத்து கூலிச் செலவை குறைக்க முடிகிறது. வங்க தேச ஆயத்த ஆடைத் துறையில் பெண்களின் கூலி ஆண்களுக்குக் கொடுக்கப்படும் கூலியில் சுமார் 73% ஆக உள்ளது என்கிறார் ஜான் ஸ்மித். சென்னைக்கு அருகில் இயங்கிய ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் நோக்கியா ஃபோன் உற்பத்தி தொழிற்சாலையில் கூட பெண்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கூலியை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கு முதலாளித்துவம் வழி கண்டு பிடிக்கிறது, குறைந்த விலை, குறைந்த கூலி, செலவுக் குறைப்பு, அதிக லாபம், மூலதனக் குவிப்பு என்று ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த உந்து சக்தி எப்படி இயங்குகிறது என்பதிலிருந்து ஜான் ஸ்மித் பேசுகிறார். இதை எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம். ஜக்தீஷ் பகவதி போன்ற முதலாளித்துவ அறிஞர்களை விட்டு விடுவோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய இயக்கத்தில் இதை எப்படி புரிந்து கொள்கிறோம். இதற்கு என்ன விளக்கம் அளிக்கிறோம்? ஏகாதிபத்தியம் பற்றி நாம் புரிந்து கொள்வது லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் இருந்து. அந்த நூலில் பெரிய ஏகபோக தொழில் நிறுவனங்கள் உருவாவது, வங்கிகள் ஏகபோகங்களாக உருவெடுப்பது, வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் இணைந்து நிதி மூலதனம் உருவாவது, மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக பிரித்துக் கொள்வது என்று 5 அம்சங்களை அந்த நூல் விளக்குகிறது.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் என்ற நூல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது போன்ற ஒரு பிரகடனம். அரசியல் ரீதியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஜான் ஸ்மித் இதை எப்படி பார்க்கிறார்?

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகளான சான் சிமோன், ஃபூரியே, சிஸ்மாண்டி போன்றவர்கள் முதலாளித்துவ சமூகத்தை மிகக் கடுமையாகவும் துல்லியமாகவும் விமர்சிக்கிறார்கள். “என்ன மாதிரியான உலகம் இது. இவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகி குவிகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில், பட்டினியில் உழல்கிறார்கள். எதிர்காலத்தில் நாம் ஒரு பொன்னுலகை படைப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் ஒரு உலகத்தை படைப்போம்" என்று இவர்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் அறிவியல் அடிப்படை இல்லாத கற்பனாவாத சிந்தனைகள்.

முதலாளித்துவம் பற்றிய அறிவியல் அடிப்படையை வழங்குவது மார்க்ஸ் தனது 20-30 ஆண்டு கால உழைப்பின் மூலம் படைத்த மூலதனம் நூல். மூலதனம் நூல் சரக்கு - பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு, மதிப்பை படைப்பது எது, உழைப்பின் இரட்டைத் தன்மை என்று ஆரம்பிக்கிறது. மூலதனம் நூலில் மார்க்ஸ் பேசக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் இந்தப் புள்ளியில் இருந்து வளர்த்துச் சென்று அடையலாம்.

அறிவியல் இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது. உதாரணமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் தேல்ஸ் உலகத்தில் எல்லாமே நீரால் ஆனது என்று முன் வைத்த கருதுகோள் அறிவியல் சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு பாய்ச்சல் என்கிறார்கள் அறிஞர்கள்.

இவ்வாறு முதலாளித்துவத்தின் எல்லா நிகழ்வுகளையும் ஒரு அடிப்படை கருதுகோளிலிருந்து விளக்கும் போது அவற்றில் என்னென்ன பாத்திரங்கள் உள்ளன, அவர்களுக்கிடையே இருக்கும் உறவு என்ன, மாறிச்செல்லும் இயக்கத்தின் விதிகள் என்ன என்று எல்லா விஷயங்களும் மூலதனம் நூலில் விளக்கப்படுகின்றன.

அத்தகைய அறிவியல் அடிப்படையில் லெனினின் ஏகாதிபத்தியம் நூல் எழுதப்படவில்லை. அவரது நோக்கமும் அதுவாக இருக்கவில்லை. அடுத்த 100 ஆண்டுகளில் உலக கம்யூனிச இயக்கத்தில் என்ன நடந்தது என்று ஜான் ஸ்மித் பரிசீலனை செய்கிறார். 1915 முதல் 2010 வரையில் மார்க்சிய அறிஞர்கள் செய்த ஆய்வுகளை பரிசீலிக்கிறார். சோவியத் யூனியனிலும் உலகின் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஸ்டாலினிசம் பொருளாதாரத் துறையில் அறிவியல் அணுகுமுறையை காலி செய்து விட்டது என்கிறார். பால் ஸ்வீசி, பால் பேரன் அவர்கள் மதிப்பு விதியை ஒட்டி ஏகபோகங்களை பரிசீலிக்கிறார்., பின்னர் சார்புநிலை கோட்பாட்டு வாதிகள் மதிப்பு விதியின் அடிப்படையில் பேசியிருக்கின்றனர். 1990-கள், 2000-களில் டேவிட் ஹார்வி, எலன் வுட், மைக்கேல் ராபர்ட்ஸ் போன்ற கல்வித்துறை அறிஞர்கள் ஆய்வு செய்கின்றனர்.

இவர்கள் யாரும் புதிதாக தோன்றியிருக்கும் ஒரு நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 1970-80களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் இருந்தார்கள். இன்று 80% தொழிலாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இந்தத் தொழிலாளர்கள் மதிப்பை படைத்து இந்த மதிப்பு பல்வேறு நிறுவனங்களுக்கிடையே பங்கிடப்படுகிறது. இந்த நிகழ்வை தீர்மானிக்கும் விதிகள் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன உதாரணத்தில் வங்கதேசத்தின் ஜி.டி.பியை பார்த்தால் ஒரு சட்டைக்கு €0.90 தான் சேர்ப்பார்கள். €1.35 ஏற்றுமதி, €0.40 இறக்குமதி. €.95தான் வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேரும். ஜெர்மனியின் ஜி.டி.பில் €3.60 சேரும். இதன்படி 'ஜெர்மனி பணக்கார நாடு, அங்குதான் உற்பத்தித் திறன் அதிகம். அவர்கள் €3.60 உற்பத்தி செய்திருக்கிறார்கள். வங்கதேச தொழிலாளர்கள் €0.90 தானே உற்பத்தி செய்திருக்கிறார்கள்' இப்படி நாம் எடுக்கும் தரவுகளில் பல தவறான சித்திரங்களை தருகின்றன. புள்ளிவிபரங்களையே இந்த பார்வையோடு கையாள வேண்டியிருக்கிறது என்று ஜான் ஸ்மித் வாதிடுகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 5

(6-வது பகுதியில் தொடரும்...)

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம் 9 Mar 2019 11:16 PM (6 years ago)

வ்வாறாக, தோல் பொருட்களாக இருக்கலாம், மின்னணு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஆயத்த ஆடையாக இருக்கலாம். ஆயத்த ஆடைகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள். தோல் பொருட்களை செய்வதே ஏற்றுமதிக்குத்தான். உற்பத்தி ஆவதில் 85% - 90% வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது. வெளி நாட்டுக்கு ஏற்றுமதி ஆகும் தோலுக்காக தொழிலாளர்கள் சாகின்றனர்.

ஒரு கணக்கு போட்டு பார்க்கலாம். தொழிலாளிக்கு என்ன கூலி கொடுக்கிறார்கள்?

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் ஏன் தமிழ்நாட்டு தொழிலாளியை வைத்துக் கொள்ளவில்லை. அவர் ரூ 500 – ரூ 600 கூலி கேட்பார். சட்டம் பேசுவார். “சார் 5 மணிக்கு மேலே எல்லாம் வேலை செய்ய முடியாது" என்பார். மிதினாப்பூரில் இருந்து தொழிலாளி வந்தால் 200 ரூபாய் 250 ரூபாய் கூலியில் வேலை வாங்கலாம். டேனரியிலேயே ஓரமாக படுத்துக் கொள்ளச் சொல்லலாம். வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கடைக்குப் போய் கோதுமை மாவு வாங்கி வந்து ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்வார். மாதம் 2,000 ரூபாய் செலவழித்தால், மீதி 7,000 – 8,000 ஊருக்கு அனுப்புவார். இது போன்று நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான இடங்களில் வட இந்தியத் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

சீனாவிலும் ஜார்ஜ் ஷூ தொழிற்சாலையிலோ, ஆப்பிள் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலோ வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்கள். அதனால்தான் அவர்கள் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து வேலை செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? ராணிப்பேட்டைக்கு வெளியூரில் இருந்து வேலைக்கு வருபவர் தன் குடும்பம், குழந்தைகளை அழைத்து வந்து தங்கி வேலை செய்ய வேண்டுமானால் ரூ 50,000 மாதச் சம்பளம் கொடுத்தால்தானே முடியும். நாம் என்ன கொடுக்கிறோம், ரூ 9,000. அப்படியானால், தொழிலாளியின் தேவையான கூலியிலிருந்து 41,000 ரூபாய் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் எங்கு போச்சு?

உள்ளூர் முதலாளியும் பெரிய மாட மாளிகை கட்டி இந்தியாவை வல்லரசாக்கி விடவில்லை. இந்தியா பாகிஸ்தானுடன் சண்டை போட பிரான்சிடமிருந்து விமானம் வாங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ராணிப்பேட்டை தொழிலாளர்களின் கூலியிலிருந்து மிச்சப்படுத்தப்படும் இந்தப் பணம், கடைசியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிராண்டுகளால் கைப்பற்றப்படுகிறது என்று ஜான் ஸ்மித் சொல்கிறார்.

இது ஒரு அம்சம்தான். கூலி குறைய குறைய உபரி மதிப்பு அதிகமாகும். லாபத்தை தீர்மானிக்கும் இன்னொரு அம்சம் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவுகள். உள்ளீட்டு பொருட்களின் செலவை குறைத்தால் லாப வீதம் கூடும். கழிவு நீரை பல கோடி செலவழித்து முறையாக சுத்திகரித்து, இங்கிலாந்து, ஜெர்மனியில் செய்வது போல செங்கலாக மாற்றி பாதுகாப்பாக கையாள்வதற்கு எவ்வளவு செலவாகும். அதையும் நீங்கள் மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

இதை எல்லாம் சேர்ந்து உங்கள் நாட்டு முதலாளி கூட வாழவில்லை. இந்தியாவாக இருக்கட்டும், சீனாவாக இருக்கட்டும், வங்கதேசமாகட்டும். இந்த நாடுகளில்தான் உலகளாவிய உற்பத்தித் துறையின் பெருமளவு மனித உழைப்பு நிகழ்கிறது. 1990-களுக்குப் பிறகு இது போன்ற நாடுகளில் உலகளாவிய உற்பத்தி பரவியிருக்கிறது. இந்த நாடுகளில் தொழிலாளிக்கு குறைவான கூலி கொடுத்து கடுமையாக சுரண்டலாம். இது தொடர்பாக ஜான் ஸ்மித் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைக்கிறார்.

மார்க்ஸ் மூலதனம் நூலில் வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதன் மூலம் பெறப்படும் அறுதி உபரி மதிப்பு, தொழிலாளிக்குத் தேவையான பொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் கூலியை குறைத்து பெறப்படும் ஒப்பீட்டு உபரி மதிப்பு 2 வகையான உபரி மதிப்புகளை பரிசீலிக்கிறார். ஆனால், மூன்றாவது வகையை குறிப்பிட்டு விட்டு அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி வைக்கிறார். அதுதான் தொழிலாளியில் உழைப்பு சக்தியின் மதிப்பை விடக் குறைவான கூலி கொடுத்து சுரண்டுவது. இது அதீத சுரண்டல் என்று அழைக்கப்படுகிறது.

40,000 ரூபாய் உழைப்பு சக்தியின் மதிப்பு. அதற்கு பதிலாக ரூ 10,000 கொடுத்து சுரண்டப்படுகிறார், தொழிலாளி. இவ்வாறு இந்தியா, வங்கதேசம், சீனா போன்ற நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டுவது உலக முதலாளித்துவத்துக்கு பிரதான தேவையாக மாறியிருக்கிறது என்று ஒரு கருதுகோளாக ஜான் ஸ்மித் முன் வைக்கிறார்.

இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். ஐஃபோன் நம்மில் பலரிடம் இல்லை. எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளான ஒரு டி-ஷர்ட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த டி-ஷர்ட் ஜெர்மனியில் €4.95 விலைக்கு விற்கிறது. இந்த பிராண்டுக்கு சொந்தமானது எச்&எம் என்ற ஸ்வீடன் நிறுவனம். இந்த டி-ஷர்ட் வங்க தேசத்தில் உற்பத்தி ஆகி ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதி விலை €1.35. இதில் பருத்தித் துணியை இறக்குமதி செய்ய €0.40 செலவாகி விடுகிறது. எனவே, வங்கதேச முதலாளிக்கு கிடைப்பது, வங்கதேசத்தின் ஜி.டி.பியில் சேர்வது €0.95 தான். மீதி எல்லா மதிப்பும் ஜெர்மனியில் கைப்பற்றப்படுகிறது. ஜெர்மனியில் எச்&எம் லாபம், அங்குள்ள சில்லறை விற்பனை நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், ஜெர்மன் அரசுக்கு வரி என்று போகிறது.

வங்கதேசத்தில் தொழிலாளர்கள் என்ன நிலைமையில் வேலை செய்கிறார்கள்? 10-12 மணி நேர வேலை என்பது சர்வசாதாரணமான ஒன்று. அவர்களுக்கு ஒரு நாளைக்குக் கூலி €1.30. சுமார் 150 ரூபாய்தான் கூலி. இதை வாங்கிக் கொண்டு அவர்கள் உழைக்கிறார்கள்.

2015-ல் வங்க தேசத்தில் நடந்த விபத்து எல்லோருக்கும் நினைவு இருக்கும். ராணா பிளாசா என்ற கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த பழைய கட்டிடத்தில் மேல் மாடியில் ஆயத்த ஆடை ஆலை. கீழே வங்கி, கடைகள். அந்தக் கட்டிடத்தை ஒரு வாரத்துக்கு முன்பு ஆய்வு செய்து இது பயன்படுத்த தகுதி இல்லாத கட்டிடம் என்று கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களை அழைத்து வேலையை தொடங்குகின்றனர், ஆலை முதலாளிகள். எந்திரத்தை ஆன் செய்ததும் கட்டிடம் இடிந்து விழுகிறது. இதில் 1133 தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர், 2500 தொழிலாளர்கள் காயமடைகின்றனர்.

இதிலும் கேப் (Gap) முதலான உலகத்தின் முன்னணி பிராண்ட் ஆடைகள் இடிபாடுகளுக்கிடையே கிடக்கின்றன. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. ஒரு புகைப்படத்தில் ஒரு பையனும் பெண்ணும் கட்டிப் பிடித்த நிலையில் புதைந்திருப்பார்கள். இது எல்லாம் உலகம் எங்கும் flash ஆகிறது. இதை எல்லாம் பார்க்கும் அமெரிக்க, ஐரோப்பிய நுகர்வோர் பதட்டமடைகின்றனர். நாம் போடும் ஆடைகளை இவ்வளவு கொடூரமான நிலையிலா உற்பத்தி செய்கிறார்கள் என்று பிராண்ட் நிறுவனங்களை நோக்கி கேள்வி எழுகிறது.

இதற்கு முன்னேயே தோல் துறை, ஜவுளித் துறை போன்ற ஏற்றுமதி துறைகளில் 1990களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் முறை, பின்னர் சுற்றுச் சூழல் ஆய்வு, தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு என்று பல்வேறு சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தார்கள். யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். நான் வேலை செய்த பிரிட்டிஷ் நிறுவனம் போன்றவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். இந்த ஆய்வு எப்படி நடக்கும் எந்த அடிப்படையில் சான்றிதழ் கொடுப்பார்கள் என்று நமக்கெல்லாம் நடைமுறை தெரியும். இவற்றின் மூலம் நாங்கள் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக செய்கிறார்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 4

(5-வது பகுதியில் தொடரும்...)

  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள் 8 Mar 2019 11:11 PM (6 years ago)

ன்னொரு காட்சியை பார்ப்போம்.

உலகத்தின் உற்பத்தி தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவில் உற்பத்தி நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன? நான் அத்தகைய ஒரு தொழிற்சாலைக்கு போயிருக்கிறேன்.

டாடாவில் இருந்து தோல் வாங்கும் ஒரு தொழிற்சாலை, சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் பகுதியில் உள்ளது. ஷென்சென் பகுதி, 1978ல் மேக் இன் சீனா திட்டத்துக்காக அப்போதைய சீன அதிபர் தெங் ஷியாவ் பிங் தேர்ந்தெடுத்த பிராந்தியம். ஹாங்காங்-தீவில் இருந்து படகில் ஏறினால் கடலைக் கடந்து அரை மணி நேரத்தில் ஷென்சென் போய்ச் சேர்ந்து விடலாம். அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் கையில் இருந்தது. ஷென்சென் பகுதியில் நூற்றுக் கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள், பொம்மை தொழிற்சாலைகள், மின்னணு பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. அதன் பூர்வீகத்தில் ஷென்சென் பகுதியில் 1970-களில் சிறிய கிராமங்கள்தான் இருந்தன. இன்று அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.
சீனத் தொழிலாளர்கள் தங்கும் இட வசதி (மாதிரி)

நான் போன தொழிற்சாலையின் உரிமையாளர் அவர் தாய்வானைச் சேர்ந்தவர். அங்கு சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு கட்டிடத்தில் உற்பத்தி, 5000 தொழிலாளர்களும் தங்குவதற்கு அதற்கு பக்கத்திலேயே கட்டிடங்கள். தங்குமிடம் எப்படி இருக்கும் என்றால் ரயிலில் படுக்கை வசதி பெட்டி போல எதிரெதிராக மூன்று மூன்று படுக்கைகள், பெட்டி வைத்துக் கொள்வதற்கு ஒரு இடம் இருக்கும். அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். நம் ஊர் வடமாநில தொழிலாளர்கள் போல இவர்கள் சீனாவின் விவசாய பிரதேசங்களில் இருந்து வேலைக்காக ஷென்சென் வந்தவர்கள். எனவே, தங்குவதற்கும் அவர்களது புகலிடம் தொழிற்சாலையேதான்.

காலையில் 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்றால் அதிகாலை 6.30-க்கு ஆலை மணி ஒலித்து 5,000 தொழிலாளர்களும் மைதானத்துக்கு வந்து விடுவார்கள். அந்தந்த பிரிவு சூப்பர்வைசர் தலைமையில் உடற்பயிற்சி செய்வித்து, நேற்று முடிந்த உற்பத்தி பற்றியும் இன்று நடத்த வேண்டிய வேலைகள் பற்றியும் சொல்ல வேண்டிய தகவல்களை சொல்லி விட்டு கலைந்து செல்வார்கள். 7 மணிக்கு போய் விட்டு 8 மணிக்குள் தயாராகி காலை உணவு நிறுவனத்தின் உணவுக் கூடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு வருவார்கள்.

ஆப்பிள் உற்பத்தி தொழிலாளர்கள்


8 மணிக்கு வேலை ஆரம்பித்து மதிய உணவு வரை வேலை. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் வேலை. மாலை வேலை நேரம் முடிந்த பிறகு அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொழுது போக்கலாம். பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மறுபடியும் திரும்பி வந்து தொழிற்சாலையில் சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம்.

இதே போன்ற ஒரு தொழிற்சாலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தியாகிறது ஆப்பிள் ஐஃபோன் அல்லது சாம்சங் அல்லது நோக்கியா ஃபோன் சீனாவில் உற்பத்தியாகிறது. ஆப்பிள் ஐஃபோன் உற்பத்தியாகும் தொழிற்சாலை ஆப்பிளுக்கு ஒரு ரூபாய் கூட ஷேர் சொந்தம் கிடையாது. அது ஒட்டுமொத்தமாக ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமானது. ஹோன் ஹாய் ஹோல்டிங் என்ற தாய்வான் நிறுவனத்தின் ஆலை அது. அங்கு பல 10,000 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு வேலை செய்கிறார்கள். இதே போன்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆப்பிள் ஐஃபோன் தொடர்பான ஒரு நிகழ்வை பார்க்கலாம்.

2007-ம் ஆண்டில் ஐஃபோன் கருவியை ஆப்பிள் முதன் முதலாக அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு மாதிரியான eccentric, maniac. கூட வேலை செய்பவர்கள் கன்னா பின்னாவென்று திட்டுவார், தன்னைத் தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து கொள்பவர். உண்மையில் திறமைசாலியும்தான். அவர் புதிதாக சந்தைக்கு வரவிருந்த ஐஃபோனை தானே பயன்படுத்தி சோதனை செய்து கொண்டிருக்கிறார். தனது பையில் ஐஃபோனை வைத்திருந்த போது உடன் போட்டு வைத்திருந்த சாவிக் கொத்து உராய்ந்து ஐஃபோன் திரையில் ஸ்க்ராட்ச் விழுந்து விட்டன.

ஸ்டீவ் ஜாப்ஸ்
 டிசைன் டீமை கூப்பிட்டு திட்டுகிறார். "கஸ்டமர் சாவிக்கொத்துடன் ஃபோனை போட்டு வைத்திருந்தால் இப்படி ஸ்கிராட்ச் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது? ஐஃபோன் சந்தைக்கு வருவதற்கு ஒரு சில வாரங்கள்தான் இருக்கிறது. நீங்கள் உடனடியாக புதிய மெட்டீரியலை கண்டு பிடித்து இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று உத்தரவிடுகிறார்.

ஆய்வுக்கு பிறகு கண்ணாடி திரைகளை பயன்படுத்த வேண்டும் என்று முடிவாகிறது. இந்தக் கண்ணாடியை திரைகளாக வெட்டித் தரும் ஆலையும் சீனாவில்தான் உள்ளது. அங்கு ஆப்பிள் டீம் ஆய்வுக்கு செல்லும் போது ஆப்பிள் ஆர்டர் வந்தால் பயன்படுத்துவதற்கு என்று புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள், அரசு மானியத்துடன். அந்த ஆலைக்கு ஆர்டர் கொடுத்து ஐஃபோனுக்கான கண்ணாடி திரைகள் தயாராகின்றன. வெட்டப்பட்ட கண்ணாடி திரைகள் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் வந்து சேர்கின்றன. வந்தவுடன் தொழிற்சாலை மணி அடிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் படுக்கையில் இருந்து எழுப்பப்படுகின்றனர். ஆளுக்கு ஒரு டீ, 2 பிஸ்கட் கொடுத்து உற்பத்தியில் உட்கார வைக்கப்படுகின்றனர். உற்பத்தி ஆரம்பமாகி விட்டது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் ஆலையிலிருந்து ஐஃபோன் அனுப்பப்பட ஆரம்பிக்கிறது.

ஐஃபோன் ஆகட்டும், ஷூவாகட்டும் பொருளை உற்பத்தி செய்து அதில் பிராண்ட் பெயரை பொறித்து, அட்டைப் பெட்டியில் நிரப்பி, எந்த அமெரிக்கக் கடைக்குப் போக வேண்டும் என்ற பெயரைக் கூட சீனத் தொழிற்சாலையிலேயே எழுதி விடுவார்கள். ஆப்பிளுக்கு பொருள் போகாது. இது உலகத்தின் தொழிற்சாலை என்று பேசப்படும் சீனாவில் நடப்பது. இதை எப்படி புரிந்து கொள்வது? சீனாவில் ஐஃபோன் உற்பத்தியாகி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படுகிறது. அமெரிக்காவில் என்ன வேலை நடக்கிறது. பெட்டியை ஏற்றி இறக்குவது, கடையில் விற்பவர்கள், கணக்கு வைப்பவர்கள், ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் டிசைன் வேலை நடக்கிறது. இதுதான் அமெரிக்காவில் நடக்கும் வேலை. இதே முறைதான் காலணிக்கும் சரி, இந்தியாவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைக்கும் சரி பொருந்தும்.

பொருள் உற்பத்தி முழுவதும் நடந்து முடிந்து விடும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கிடைக்கும் விலையை விட இரண்டு மடங்குக்கும் மேல் உற்பத்திக்கு முந்தைய டிசைன் வேலைகளையும் உற்பத்திக்குப் பிந்தைய விற்பனை வேலைகளையும் செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கைப்பற்றப்படுகிறது. இந்தப் பொருட்களின் உற்பத்தி செலவு பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வது கஷ்டமானது. இதை ஆய்வு செய்த ஒரு குழு ஐபாட் தொடர்பான விலை விபரங்களை வெளியிட்டிருக்கிறது. ஐஃபோன் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு ஐபாட் ஒன்றின் விற்பனை விலை $299, சீனாவில் இருந்து தயார் நிலையில் ஏற்றுமதியாகும் பொருளின் ஏற்றுமதி விலை $144.5. அதாவது 52% மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தால் கைப்பற்றப்படுகிறது.

மதிப்பு சீனாவிலும் பிற நாடுகளின் தொழில்சாலைகளிலும் படைக்கப்படுகிறது. மதிப்பு அமெரிக்காவில் ஆப்பிளில் கைப்பற்றப்படுகிறது. ஆனால், சீனாவில் படைக்கப்பட்ட மதிப்பாக $144.5 கூட வராது. ஏனென்றால் பல பகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலியான சுமார் $6 தான் மதிப்பாக ஒரு ஃபோனுக்கு சீன ஜி.டி.பியில் சேர்கிறது. மீதி எல்லாம் சீனத் தொழிற்சாலையின் செலவில் சேர்க்கப்படுகிறது.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 3

(4-வது பகுதியில் தொடரும்...) 
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

புதிய பாதை படைக்கும் தே.மு.தி.க - சுதீஷ், பிரேமலதாவின் அரசியல் சாணக்கியம்! 8 Mar 2019 7:30 PM (6 years ago)

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி ஒரே நேரத்தில் அ.தி.மு.கவுடனும், தி.மு.கவுடனும் கூட்டணி பேரம் நடத்தியது என்று ஒரு சர்ச்சை ஓடுகிறது. கூட்டணி பேரம் நடத்தியதில் தவறில்லையாம் அதை வெளிப்படையாக சொன்னதுதான் பிரச்சனையாம். முன்னதாக பா.ம.கவும் இரு தரப்பிடமும் பேரம் பேசியது என்பது அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்தது. இப்படி ஒளித்து மறைத்து வெட்கப்பட்டுக் கொண்டு செய்து வந்தவற்றை வெளிப்படையாக போட்டு உடைக்கும் கட்சிகளுக்கு முன்னோடி விஜயகாந்தின், இல்லை இல்லை, அவரது மனைவி பிரேமலதாவின் தே.மு.தி.க.

தேசியம், திராவிடம் எல்லாவற்றையும் உதிர்த்து போட்டு விட்டு கட்சி நடத்த முடியும் கட்டம் வந்திராத 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கட்சி இது. அதனால், பெயரில் தேசியம், முற்போக்கு, திராவிடம் என்பதை எல்லாம் சேர்க்க வேண்டியது இருந்தது. அப்போதுதான் அரசியலில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களை ஈர்க்க முடியும்.

அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிக் கட்சி ஆரம்பித்த மருத்துவர் ராமதாஸ் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்தார். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்களை கவர் செய்ய வேண்டிய அரசியல் நிலைமை அன்று இருந்தது.

சமீபத்தில் டி.டி.வி தினகரன் என்பவர் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு இந்த பாவலாக்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஜெயலலிதா, பண மூட்டை இரண்டும் சேர்ந்ததுதான் அவரது கட்சியின் கொள்கையும் விதிமுறைகளும்.

சரி, இப்போது தே.மு.தி.கவுக்கு திரும்பி வருவோம்.

சமூக அநீதிகளைக் கண்டு கொதிக்கும் இளைஞனாக திரைப்படங்களில் வில்லன்களை பந்தாடியவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா, மனைவியில் தம்பி சுதீஷ் இவர்களை மையமாக வைத்து உருவானதுதான் தே.மு.தி.க என்ற கட்சி. அரசியலில் நுழைவதற்கு தயாரிப்பாக பல ஆண்டுகளாகவே ரசிகர் மன்றங்களை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவி செய்வது என்று ஒரு பிராண்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

2005-ல் தனியாக கட்சி ஆரம்பித்து 2006 சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருந்த விஜயகாந்தின் தலையை தட்டி வைக்க வேண்டும் என்பதும் தி.மு.கவின் கணக்காக இருந்தது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் இவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை கோயம்பேடு மேம்பாலம் கட்டுவதற்காக இடித்து விட்டார்கள். அதைத் தவிர்க்கும்படி சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தி.மு.கவின் டி.ஆர்.பாலுவை பல முறை சந்தித்தும் அவர்கள் மசியவில்லை. விஜயகாந்தோ இந்த அநீதியை எதிர்த்து முகம் சிவந்து அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆளும் கட்சியாகவும், தே.மு.தி.க முக்கிய எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பின் அ.தி.மு.க அமைச்சர் மரியம் பிச்சை கார் விபத்தில் பலியான போது, "இப்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதை அனுபவிக்க முடியாமல் அய்யோ பாவம் பலியாகி விட்டார்" என்று அறிக்கை விட்டார் விஜயகாந்த். இவ்வாறாக, சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது அனுபவிப்பதற்கானது என்ற ஊரறிந்த ரகசியத்தை தன் வாயாலும் போட்டு உடைத்து விட்டார்.

அதன் பிறகு ஜெயலலிதாவுடன் முட்டிக் கொண்டு ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி என்ற வெளிப்படையான ரகசியத்தை உலகுக்கு அறிவித்தார். கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கட்சி தாவ வைப்பது என்று ஜெயலலிதா தே.மு.தி.கவை திட்டமிட்டு சிதைத்தார். இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை மோசமாகி பேசுவது பிரச்சனையாக இருந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனும் 2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்றும் போட்டியிட்டு எதுவும் தேறவில்லை.

எனவே, இப்போது போட்ட முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள பிரேமலதாவும், சுதீஷூம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கலக்கியிருக்கின்றனர். "பெண் வீட்டில் இருந்தால் நான்கு பேர் கேட்டு வரத்தான் செய்வார்கள்" என்ற ரகசியத்தை அம்பலமாக்கியிருக்கிறார்.

தமிழகமே, இதற்கு மேல் என்ன வேண்டும், அரசியல் தரத்துக்கு!

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா? 7 Mar 2019 11:06 PM (6 years ago)

டுத்த காட்சி. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி ராணிப்பேட்டையில் நடந்த ஒரு விபத்து பற்றியது. அதில் 10 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரோடு சேற்று சுனாமியில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

ராணிப்பேட்டை நகரம் இருப்பது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரம்தான். 1970-80-களில் தோல் பதனிடும் தொழிலை மிகப்பெரிய அளவில் அங்கு கொண்டு வருகிறார்கள். சிப்காட் 1, சிப்காட் 2 என்று அரசே நிலத்தை கையகப்படுத்தி, விவசாய கிராமங்களுக்கு மத்தியில் டேனரிகளை கொண்டு வருகிறார்கள்.


பொதுவாக, தோல் பதனிடுவதற்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் கழிவு நீரில் வெளியேறும். ஐரோப்பாவில் கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளியில் விட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு (1990-கள் வரை) யாருமே சுத்திகரிப்பு செய்யவில்லை. இரசாயனம் கலந்த கழிவு நீரை அப்படியே வெளியிட்டனர்.
அது சுற்றியிருந்த கிராமங்களில் நிலத்தையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கியது. 1990-களில் ஒரு என்.ஜி.ஓ போட்ட மனுவில் உச்ச நீதிமன்றம் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை இல்லை என்றால் எல்லா பதனிடும் தொழிற்சாலைகளையும் இழுத்து மூடி விடும்படி உத்தரவிட்டது.

இதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. இங்கிலாந்தில் இருந்து, நெதர்லாந்தில் இருந்தும் நிபுணர்கள் வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் பொது சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்துகின்றனர். அதாவது, 100 ஆலைகள் இருந்தால் அவர்கள் அனைவரும் கழிவுநீரை வெளியிடுவதை ஒன்றாக சேர்த்து சுத்திகரிப்பார்கள். இத்தகைய சுத்திகரிப்பு ஆலை ராணிப்பேட்டை சிப்காட் 1-ல் இயங்கி வருகிறது.

இரசாயனம் கலந்த கழிவு நீரை சுத்தப்படுத்தும் போது கரைந்திருந்த இரசாயனங்கள் எல்லா்ம் பிரித்து எடுக்கப்படும். தண்ணீர் சுத்தமாக்கப்பட்டு வெளியில் விட்ட பிறகு (அப்படி சுத்தமாக்கப்படுகிறதா என்பது வேறு கேள்வி, அதை இங்கு பேசப் போவதில்லை) பிரித்து எடுக்கப்பட இரசாயனங்களின் சேறு, சகதி மிஞ்சும். இதை என்ன செய்வது? பொதுவாக அதை காயவைத்து லாரியில் எடுத்துச் சென்று அதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலத்தில் கொட்டி வைக்க வேண்டும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் கழிவு இரசாயன சகதியை சேமித்து வைப்பதற்கு ஒரு தொட்டி கட்டியிருந்தார்கள். தொட்டி நிரம்பியதும் அதை அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் அதை எடுத்துக் கொண்டு போகவில்லை. குறிப்பிட்ட கட்டத்தில் தொட்டி நிரம்பி விட்டது. தொட்டிக்கு பக்கத்தில் எந்தவிதமான முறையான திட்டமும், வடிவமைப்பும் செய்யாமல் மதில் கட்டி சகதியை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இந்தச் சுவரை ஒட்டி சுமார் 4-6 டன் சகதி தேங்கி நிற்கிறது. அதற்கு பக்கத்தில் சுவரை ஒட்டி ஆர்.கே லெதர்ஸ் என்ற தோல் ஆலை உள்ளது. ஜனவரி 30-ம் தேதி இரவு சகதியின் அழுத்தத்தால் சுவர் உடைந்து போனது. சகதி சுனாமி போல வெளியேறி அந்தப் பகுதி முழுக்க சேறு நிரம்பி விட்டது. பக்கத்தில் இருந்த டேனரியில் 10 தொழிலாளர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.



அது ஒரு தொழிற்பேட்டை, இரசாயனம் பயன்படுத்தும் இடம். சாதாரணமாக வேலை செய்ய அனுப்பினாலேயே முகத்தை மூடி, கையில் உறை போட்டுத்தான் போக வேண்டும். இங்குதான் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த 10 தொழிலாளர்களும் சேறில் மூழ்கடிக்கப்பட்டு, இரசாயனத்தில் மூச்சுத் திணறி, மின் கசிவில் பரவிய மின்சாரத்தில் சிக்கிக் கொல்லப்பட்டனர். 10 பேரும் மேற்கு வங்கத்தின் மிதினாப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு இந்த தோல் தொழிற்சாலையில் வேலை செய்ய வந்திருக்கிறார்கள்.

எனக்கு இது தனிப்பட்ட முறையில் நெருக்கமான இடம். ராணிப்பேட்டையில் தொழில் தொடர்பாக பல முறை சுற்றி வந்திருக்கிறேன். ஆர்.கே லெதர் நிறுவனத்தை பற்றி பலமுறை பேசியிருக்கிறேன். இதை எப்படி புரிந்து கொள்வது? இதற்கு எங்கு போய் விளக்கம் தேடுவீர்கள்?

இந்த டேனரியும் சரி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் சரி, சீனத் தொழிற்சாலையும் சரி பொருளாதாரத் துறையில்தான் வருகின்றன. ஆனால், நான் கல்லூரியில் படிக்கும் போது வாசித்த பால் சாமுவேல்சன் போன்றவர்கள் எழுதிய முதலாளித்துவ பொருளாதாரவியல் நூல்களில் இதற்கான விடை கிடைக்காது. "இது எல்லாம் எங்கள் துறையில் வராது, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை என்ன செய்து கொண்டிருந்தது, அரசு என்ன செய்தது" என்று இவற்றைப் பற்றிய ஆய்வை சமூகவியல் துறைக்கு ஒதுக்கி விடுவார்கள்.

இந்த ஒரு காட்சியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆர்.கே லெதர் என்பது என்ன? இந்த நிறுவனத்தின் பார்ட்னர்கள் நான் வேலை செய்த டாடா நிறுவனத்தில் நான் சேர்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் வேலை செய்தார்கள். டாடா நிறுவனத்தின் தோலை ஹாங்காங் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் பணியில் இருந்தார்கள். சிறிது காலத்துக்குப் பிறகு டாடா நிறுவனத்தை விட்டு விலகி தனியாக நிறுவனம் ஆரம்பித்து ராணிப்பேட்டையில் தாமே ஆலை நடத்தி தோல்களை சீன தொழிற்சாலைகளுக்கு ஹாங்காங் வழியாக ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தினார்கள்.

ஆர்.கே லெதர்ஸ் ஆகட்டும், டாடா நிறுவனம் ஆகட்டும், இந்தியாவில் உற்பத்தி ஆகும் தோலை ஹாங்காங் அலுவலகம் மூலமாக சீனத் தொழிற்சாலைகளுக்கு சந்தைப்படுத்தி வந்தனர். சீனத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி ஆகும்.


சென்னை சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி

ஹாங்காங் விற்பனை மீட்டிங்கில் என்ன நடக்கும்? அத்தகைய மீட்டிங் ஒன்றுக்கு நான். போயிருக்கிறேன்.

அமெரிக்காவின் பிராண்ட் நிறுவனத்தின் பிரதிநிதி வருவார். அமெரிக்க பிராண்ட் பிரதிநிதி, தோல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர், சீனாவில் இருக்கும் காலணி உற்பத்தி நிறுவன பிரதிநிதி, ஹாங்காங் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நான்கு பேரும் உட்கார்ந்து பேசுவார்கள். அடுத்த சீசனில் நைன் வெஸ்ட், அல்லது நைக், ரீபோக் போன்ற அமெரிக்க பிராண்ட் எத்தனை லட்சம் ஜதை காலணிகள் செய்வது என்று விவாதிப்பார்கள்.
"இதற்கு தேவையான தோலை இவரிடம் இருந்து இன்ன விலையில் வாங்கிக் கொள்ளுங்கள். இவர் இன்ன விலையில் காலணி உற்பத்தி செய்து தருவார்" என்று எல்லாவற்றையும் அமெரிக்க பிராண்ட் நிறுவனமே திட்டமிட்டு ஏற்பாடு செய்யும். காலணியில் என்ன மாதிரியான தோலை பயன்படுத்த வேண்டும், அதன் விலை என்ன என்பது வரை முடிவு செய்து சொல்லி விடுவார்கள்.

இப்போது கேள்வி, ராணிப்பேட்டையில் நடந்த விபத்துக்கு யார் பொறுப்பு? தோல் தொழிற்சாலை முதலாளியா, சீன காலணி உற்பத்தி நிறுவனமா, ஹாங்காங் வர்த்தக நிறுவனமா, அல்லது அமெரிக்க பிராண்ட் நிறுவனமா அல்லது எல்லோருமா?
பொதுவாக என்ன சொல்கிறார்கள்? "இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை, லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்திய முதலாளி அவர்கள் நாட்டு தொழிலாளியையே ஈவு இரக்கம் இல்லாமல் சுரண்டுகிறார். ஏன் டேனரியில் தூங்க வைத்தார்கள். இந்தியாவில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

ஜான் ஸ்மித் இந்த வாதத்தை மறுக்கிறார். உலகளாவிய இந்த உற்பத்திச் சங்கிலி எப்படி இயங்குகிறது? இதை எப்படி புரிந்து கொள்வது என்று அவர் விளக்குகிறார்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 2
(3-வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

பெண்கள் மீது வேலைச் சுமையை குறைக்க உறுதி கொள்வதற்கான நாள் 7 Mar 2019 7:30 PM (6 years ago)

ன்று சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. 1917 ரசிய சோசலிச புரட்சிக்குப் பிறகு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி அது கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் பெண்கள் மேலும் மேலும் தொழிலாளர்களாக வருகின்றனர். சாதி, மத கட்டுப்பாடுகளால் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த பெண்கள் கார்மென்ட் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் வேலை செய்ய போகிறார்கள். ஏன், கட்டிட வேலையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது.

இது சமூக வாழ்வில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் நிலையை உயர்த்தியிருக்கிறது.

ஆனால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வதே குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்பதற்குத்தான். ஆண் தொழிலாளர்களை விட குறைந்த கூலி, வேலை நேரத்தில் இடைவேளை எடுக்காமல் தீவிரமாக உழைக்க வைத்தல், பிரச்சனைகளை எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் இவற்றை முன் வைத்துதான் முதலாளிகள் பெண் தொழிலாளர்களை வரவேற்கிறார்கள்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் கார்மென்ட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் பெண் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதில் ஆண்களுக்கு சளைத்தவர்களில்லை என்பதைக் காட்டின. ஆண், பெண் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து பெண்களுக்கு கூலி, வேலை நேரம், பதவி உயர்வு, பணி நிலைமைகள் போன்றவற்றில் எந்த பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சனை வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள். வேலை இடங்கள் பலவற்றில் ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற நிலையில் அதில் சேரும் பெண்களை தனிப்பட்ட பாலியல் ரீதியாக பயன்படுத்த நினைக்கும் நபர்கள் உள்ளனர். இவர்களை எதிர்த்து சட்டங்கள், நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தாலும், சக தொழிலாளர்கள், தொழிற்சங்க செயல்பாடுகள்தான் இந்த கொடூரத்தை நமது பணி வாழ்விலிருந்து ஒழித்துக் கட்டும்.

வேலை செய்யும் இடத்தில் 8 மணி நேரம், வேலைக்கு போய் வர ஒரு சில மணி நேரம், அதற்கு பிறகு வீட்டுக்கு வந்து வீட்டு வேலை, சமையல், குழந்தைகளை பராமரிக்கும் வேலை என்று பெண் தொழிலாளர்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்படுகிறது. ஆண் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது இதற்கான ஒரு தீர்வாக உள்ளது. உண்மையில், வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கு வசதிகளை கேட்க வேண்டும். ஆண்களை விட குறைந்த வேலை நேரம், அல்லது வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆள் அமர்த்துவதற்கு கூடுதல் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளை வேலை செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டியிருக்கும் அம்மாக்களுக்கு குழந்தைகளை பராமரித்து கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை வேலை செய்யும் இடத்தில் செய்து கொடுத்திருக்க வேண்டும்.

மேலும், மகப்பேறு, மாத விடாய் நாட்கள் போன்றவற்றில் பெண்ணின் உடல் உபாதைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு விடுப்பு, ஓய்வு நேரம், ஓய்வு இடம், சிறப்பு உணவு, சிறப்பு ஊதியம் வழங்குவதை சட்டரீதியாகவும், தொழிலாளர் அமைப்புகள் மூலமும் கொண்டு வர வேண்டும்.

பெண் விஞ்ஞானிகள், பெண் தொழிலாளர்கள், பெண் பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓட்டுனர்கள், விண்வெளி வீரர்கள் என்று அனைத்து துறைகளிலும் பெண்களும் சரிநிகர் சமானமாக தமது பங்களிப்பை செய்வதற்கான நிலையை உருவாக்குவது சமூக பொறுப்புள்ள எல்லோரது கடமையாகும்.

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும் 6 Mar 2019 11:04 PM (6 years ago)

நாம் ஏன் மார்க்சியத்தையோ வேறு ஏதோ ஒரு தத்துவத்தையோ நாடுகிறோம்? நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம். பார்க்கும் போது இது ஏன் இப்படி உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஒரு விபத்து நடக்கிறது, ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது, ஒரு படுகொலை அரங்கேற்றப்படுகிறது. இதிலெல்லாம் யாருடைய பங்களிப்பு என்ன? யாருக்கு ஆதாயம், யாருக்கு இழப்பு? இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று பல கேள்விகள் வருகின்றன. அவற்றுக்கு விடை கிடைப்பதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இவ்வாறு நான் எதிர்கொண்ட பல கேள்விகளுக்கு மார்க்சின் மூலதனம் நூலை படிப்பதன் மூலம் விடைகள் கிடைத்தன. மேலும், மூலதனம் நூலை 21-ம் நூற்றாண்டு முதலாளித்துவத்துக்கு பொருத்தும் ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையான ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் இன்னும் பல கேள்விகளுக்கு விடைகளை வந்தடைய உதவியது

நான் மூலதனம் நூலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூலதனம் வாசிப்பு வட்டம் சைதாப்பேட்டையில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் பிரதிநிதிகள் சங்கக் கட்டிடத்தில் நடத்தும் வகுப்பில் வாசிக்கத் தொடங்கினேன். இந்த வாசிப்பு 3-4 ஆண்டுகளாக தொடர்ந்து 3 பாகங்களும் வாசித்து முடிக்கப்பட்டன. நடுவில் பல வகுப்புகளை நான் தவற விட்டிருந்தேன். இதற்கிடையில் ஜான் ஸ்மித்தின் ஏகாதிபத்தியமும் உற்பத்தி உலகமயமாதலும் என்ற ஆய்வறிக்கையின் பிரதியும் கிடைத்து அதை படித்திருந்தேன்.

மார்க்சின் மூலதனமும், ஜான் ஸ்மித்தின் ஆய்வறிக்கையும் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த சில விடை தெரியாத கேள்விகளுக்கு எப்படி விடை அளித்தன என்பதை பேச வேண்டுமானால் எனது பணி வாழ்க்கை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும்.

நான் படித்தது பி.டெக் (லெதர் டெக்னாலஜி). வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், திண்டுக்கல் போன்ற பகுதிகளை தெரிந்தவர்களுக்கு தோல்துறை பற்றி தெரிந்திருக்கும். ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோலை அழுகாமல் பதப்படுத்தி கெமிக்கல் போட்டு ஷூ, கைப்பை, தோல் மேலாடை போன்றவை செய்ய பொருத்தமான லெதராக மாற்றுவதை டேனிங் என்று அழைக்கிறோம். அந்தத் தொழில்நுட்பத்தை சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்பாக படித்தேன்.

தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் டேனரிகள் மிக அதிக அளவில் உள்ளன. ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளிலும், சென்னையிலும் பல சிறிய மற்றும் நடுத்தர தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், நான் படித்து முடித்ததும் வேலை செய்யப் போனது மத்திய பிரதேசம் தேவாஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள டாடா குழுமத்தின் தோல் உற்பத்தி தொழிற்சாலைக்கு. இந்தியாவிலேயே அதுதான் மிகப்பெரிய தோல் பதனிடும் ஆலை. அந்த ஆலையில் 4 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அந்த ஆலையில் ஒரே கூரையின் கீழ் 1000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இங்கு semi-finished தோலை finished தோலாக உற்பத்தி செய்தனர்.

இங்கு 4 ஆண்டுகள் வேலை செய்த பிறகு டாடாவின் சீன அலுவலகத்தில் ஷாங்காய் நகரத்துக்குச் சென்றேன். டாடாவில் உற்பத்தியாகும் தோல்கள் அதன் ஹாங்காங் அலுவலகம் மூலம் சீன தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

டாடா ஷாங்காயில் 2 ஆண்டுகள் வேலை செய்த பிறகு தொழில்நுட்ப கன்சல்டன்ட் சேவை வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஷாங்காய் அலுவலகத்தில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன்.

அதன் பிறகு சென்னைக்கு வந்து தோல் தொழிற்சாலைகளுக்கான ERP மென்பொருள் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தினேன்.

ERP என்றால் என்ன? ஒரு உற்பத்தி நிறுவனத்தில் பல பொருட்களை வாங்குவார்கள். அவை உள்ளீட்டு பொருட்கள். என்ன வாங்கினோம், யாரிடம் வாங்கினோம், நம் கையில் என்ன சரக்கு இருக்கிறது. என்ன உற்பத்தி நடக்கிறது, என்ன உற்பத்தி நிகழ்முறை, இறுதியாக என்ன பொருள் உற்பத்தி செய்து வெளியில் விற்றோம், யாரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, உற்பத்திச் செலவு என்ன போன்றவற்றை நிர்வகிக்கும் மென்பொருள் செய்ய வேண்டும்.

இந்த மென்பொருள் உற்பத்தி உலகமயமாதல் என்ற நிகழ்முறையில் மிக முக்கியமான விஷயம். எனவே, இதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.

டாடா ஆலை மிகப்பெரியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். நான் அங்கு வேலை செய்யப் போகும் போது அவர்கள் ஒரு ERP மென்பொருளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு முன்னர் விற்பனை பிரிவில் இருக்கும் ஒருவர் கச்சா பொருள் கையிருப்பு என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தப் பிரிவுக்குப் போய் கேட்க வேண்டும். அந்தப் பிரிவு நிர்வாகி ஒரு அறிக்கை வைத்திருப்பார், அல்லது லெட்ஜரை புரட்டிப் பார்த்து தகவல் சொல்வார்.

இந்த ERP மென்பொருளில் எல்லோரும் ஒரே கணினி கட்டமைவில் வேலை செய்வார்கள். கச்சாப் பொருள் பிரிவில் அவர்கள் தமது தகவல்களை உள்ளிடுவார்கள். விற்பனை பிரிவில் விற்பனை தொடர்பான தகவல்களை உள்ளீடு செய்வார்கள். ஒரு பட்டனை தட்டினால் என்ன சரக்கு இருக்கிறது, என்ன வாடிக்கையாளருக்கு என்ன ஆர்டர் என்று பல விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு நான் வேலை செய்யப் போன்ற சீனாவிலும் சரி இந்தியாவிலும் சரி டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் குறைவு. சிறு, நடுத்தர நிறுவனங்கள்தான் அதிகமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்யலாம் என்று திட்டமிட்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதில் கூடுதலாக ஒரு புதிய சிந்தனையை சேர்க்க திட்டமிட்டேன்.

ராணிப்பேட்டையில் உற்பத்தியாகும் தோல் சீனாவில் காலணியாக மாற்றப்பட்டு ஹாங்காங் வழியாக அமெரிக்கா போய் சேருகிறது. அமெரிக்காவில் காலணி வாங்கும் ஒருவர் ஒரு பட்டனை தட்டினால் தோல் எங்கு செய்யப்பட்டது என்று தெரிய வேண்டும் என்பது கனவுத் திட்டம். எனவே, ஏன் இந்த உற்பத்தி சங்கிலியில் இருப்பவர்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக தரவுகளை வைத்திருக்க வேண்டும் என்று யோசித்தேன். ஒரே நிறுவனத்துக்கு ஒற்றை மென்பொருள் இருப்பதைப் போல எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மென்பொருளை பயன்படுத்தக் கொடுத்தால் ஒட்டு மொத்த உற்பத்தி சங்கிலியையும் இணைத்து விடலாம் என்று திட்டம். அதாவது, இன்று பிரபலமாகியிருக்கும் கிளவுட் முறையில் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான மென்பொருள் செய்ய திட்டமிட்டோம்.

உதாரணமாக, காலணி தொழிற்சாலையில் இருந்து டேனரிக்கு தொலைபேசி தான் கேட்டிருந்த தோல் தயாராகி விட்டதா என்று கேட்டால் கூட சரியான பதில் கிடைக்காது. இவர்கள் சொல்வதைத்தான் அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நிலைமை ஏன் இருக்க வேண்டும்? அவரே கணினியில் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்த முடியாதா?

ஆனால், இன்றைய தனியார் அடிப்படையிலான உற்பத்தி முறையில் இது வேலை செய்யவில்லை. உற்பத்தி நிறுவனத்தை பொறுத்தவரையில் எல்லா தகவல்களையும் கஸ்டமருக்கு வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. எல்லோரும் தத்தமது தரவுகளை தமது கட்டுப்பாட்டில் மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

இப்படி பல தடைகளைத் தாண்டியும், தாண்ட முடியாமலும் வணிக ரீதியாக அந்த நிறுவனம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அரசியல், பொருளாதாரம், ஆய்வு என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை ஒரு பின்னணியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(காரல்) மார்க்சிடமும் (ஜான்) ஸ்மித்திடமும் கற்றது - 1

(2வது பகுதியில் தொடரும்....)
  1. உலகளாவிய உற்பத்தியும் கனவு கண்ட மென்பொருளும்
  2. ராணிப்பேட்டை டேனரி படுகொலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பங்குண்டா?
  3. அமெரிக்க ஆப்பிளுக்கு அடிமைகளாக உழைக்கும் சீனத் தொழிலாளர்கள்
  4. ஆப்பிள் முதலான மேற்கத்திய பிராண்டுகளின் லாபத்தின் ரகசியம்ம்
  5. உலகளாவிய உற்பத்தியும் பொருளாதாரவியல் விளக்கங்களும்
  6. மார்க்சின் மூலதனமும் 21-ம் நூற்றாண்டின் உலக முதலாளித்துவமும்

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

மூக்கைப் பொத்திக் கொண்டு தினமலரின் பட்டத்தை படிக்கலாம் 5 Mar 2019 12:05 AM (6 years ago)

தினமலரின் பட்டம் அறிவியல் இணைப்பு பற்றி 2 வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.

நேற்று வாங்கிய பத்திரிகையில் அறிவியல் புரியாதா? என்பதுதான் முதல் பக்க தலைப்பு, அதை நடத்துவது சபாவில் அறிவியல் என்ற அமைப்பு. அதில் விஜய் ஷெனாய், சந்தியா கௌஷிகா, சித்தபிரா சின்கா, ஹரிணி நாகேந்திரா ஆகியோரின் புகைப்படங்களுடன் அவர்கள் பதில் சொன்ன கேள்விகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“சபாவில் அறிவியல் (Science at Sabha) என்ற பெயரில் சென்னை கணித அறிவியல் கழகம் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது. "சபாக்களில் சங்கீதம் மட்டும்தான் கேட்க முடியுமா? அறிவியல் தகவல்களைக் கேட்டால் எப்படி இருக்கும்" என்ற எண்ணத்தோடு இதை நடத்துகிறார்கள்.

புறாக்கூடுகளைப் போன்றதே எலக்ட்ரான்களும் என்கிறார் விஜய் ஷெனாய், இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு. நியூரான் தகவல்கள் எப்படி பயணம் செய்யும் என்று சந்தியா கௌஷிகா, TIFR மும்பை பேசியிருக்கிறார். விளக்கம் சொல்லும் கோட்பாடுகள் என்று சென்னை கணித அறிவியல் கழகத்தின் சித்தபிரா சின்கா முன் வைத்திருக்கிறார். ஸ்மார்ட் நகரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஹரிணி நாகேந்திரா உரையாற்றியிருகிறார்.

இது தவிர 2-ம் பக்கத்தில் ஆதார், அருண் ஜெட்லி, ஆதார் பற்றிய செய்திகள், இந்திரா நூயி, சாகோஸ் தீவுகள், ஆட்டிசம் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருந்தன. 3-ம் பக்கத்தில் த.வி வெங்கடேஸ்வரனின் பதில்கள். புயலில், மரங்களும், எடை அதிகமான பொருட்களும் பறக்கின்றன, மனிதன் ஏன் பறப்பதில்லை என்ற 11-ம் வகுப்பு மாணவனின் கேள்வி. சூரியனால் பூமியில் என்னென்ன நடக்கின்றது, சூரியன் அழிந்தால் பூமிக்கு என்ன ஆகும் என்று 8-ம் வகுப்பு படிக்கும் நவீன். தொழில்நுட்பங்கள் பெருகி இருக்கும் நவீன காலத்தில் அதிகக் கண்டுபிடிப்புகள் நடக்காதது ஏன் என்று 12-ம் வகுப்பு படிக்கும் பூர்ணி. நீரைக் கொதிக்க வைத்த பிறகு பாத்திரத்தில் சிறு சிறு குமிழ்கள் தோன்றுவது ஏன் என்று பவன் கார்த்திக் என்ற மாணவர் கேட்டிருக்கிறார். பூர்ணியின் கேள்வியைத் தவிர மற்ற மூன்றும் ஒரு குழந்தையின் மனதில் தோன்றும் இயல்பான கேள்விகள். அவற்றை அறிவியல் துல்லியத்துடன் எளிமையாக விளக்கி பதில் சொல்கிறார். பூர்ணியின் கேள்வி அரசியல் உள்ளடக்கம் நிரம்பியது. அதற்கு நேரடியான பதிலை தருகிறார். இந்த ஒரு பக்கமே பட்டத்தை விண்ணில் பறக்க விட்டு விடுகிறது.

அடுத்த பக்கம் இயற்கை நம் நண்பன் என்ற பெயரில் கட்டு விரியனுக்கும் வெள்ளிக்கோல் வரையனுக்கும் இடையேயான வேறுபாடு, போருக்குப் பலியாகும் இயற்கை என்ற தலைப்பில் மொசாம்பிக் நாட்டை முன் வைத்து போர் எதிர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. நினைவாற்றலை மேம்படுத்த இரண்டு உத்திகள் என்று ஒரு பக்கம். குடும்ப பாசம் தொடர்பான ஒரு அறநெறிக் கதை.

தமிழ் பக்கத்தில் உணவு உண்பது பற்றியும், வலி மிகுதல் பற்றியும், தமிழில் சொல்வளம் பற்றியும் தகவல்கள். வெளியாகியுள்ளன. கணித அருள் யாருக்கு என்ற தலைப்பில் 41 பேர் கொண்ட வகுப்பில் மிட்டாயை கணித அறிவை பயன்படுத்தி தானே கைப்பற்றிய மாணவனை பற்றிய கதை. இறுதியில் ஆசிரியர் அவனை பாராட்டி எல்லோருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்து மாணவர் கடிதங்கள், மைக்கேலாஞ்சலோ (இத்தாலி நாட்டு ஓவியர் -15-ம் நூற்றாண்டு), வாலன்டினா டெரஷ்கோவா (விண்வெளியில் பறந்த முதல் பெண் - ரஷ்யர்), ஜோசப் நைஸ்ஃபோர் நிப்ஸ் (புகைப்படத் துறையின் முன்னோடி - 18ம் நூற்றாண்டு), அனைத்துலக மகளிர் நாள், அமெரிக்கோ வெஸ்புகி (இத்தாலிய கடற்பயணி - 15-ம் நநூற்றாண்டு), பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் பிறந்த நாள் குறிப்புகள், யூரி ககாரின் விண்வெளியில் முதல் மனிதர் என்ற குறிப்பு, அவரது மேற்கோள்தான் கடைசிப் பக்கத்தில் முழுப்பக்கமாக.

மொத்தத்தில் அதே தரத்தில் தொடர்வதாக உள்ளது.

செய்தித் தாளில் கூட்டணி பேரத்தில் தி.மு.கவை குழப்புவதற்கான செய்தி, அதே நேரம் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்கு தே.மு.தி.க கடுப்பேற்றுவதாகவும் செய்தி இணையாக வெளியாகியிருந்தது.

முதல் பக்கத்திலேயே மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா பற்றிய செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருக்கிறது. கடைசி பக்கத்தில் "காவிரியும் ஒரு நாள் கங்கையாகும், பிரவாகமெடுத்து ஓடுவதில் அதன் தங்கையாகும்" என்ற தலைப்பில் கும்பமேளாவுக்காள அலகாபாத் போய் வந்த எல்.முருகராஜ் என்ற தினமலர் நிருபரின் கட்டுரை. சாமியார்களின் புகைப்படம், புனித நீராட குவிந்த பக்தர்கள் என்று இன்னொரு புகைப்படம்.

கங்கையை வழிபடுவது போல காவிரியையும் வழிபட ஆரம்பித்தால் காவிரியிலும் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடும் என்று ஒரு அபத்தத்துடன் கட்டுரையை முடிக்கிறார். 'கங்கையிலும் சாக்கடை, கழிவுகள் கலக்கின்றன, காவிரி கர்நாடக மழை வெள்ளத்தினால் மட்டுமே நீர் பெறுகிறது, கங்கை இமயமலை பனி உருகலிலும் நீரை பெறுகிறது' இதை எல்லாம் புறக்கணித்து விட்டு பக்தி மயமாக அடித்து விட்டிருக்கிறார்கள்.

இதில் நகரத்தின் பெயரை அலகாபாத் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது.

கடைசி பக்கத்தில் "படைகள் மீது சந்தேகமா என்று மோடி விளாசல்", "மசூத் அஸார் மரணமா, வாய் திறக்க பாக் மறுப்பு" என்று தேர்தல் பிரச்சாரம். அமெரிக்க பல்கலையில் இந்தியருக்கு பதவி, இலங்கை பிரதமர் திருப்பதியில் என்று இந்து மத, இந்திய பிரச்சாரம்.

12-ம் பக்கத்தில் ராணுவ வெறி, எதிரி நாட்டின் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒரு முக்கால் பக்கக் கட்டுரை.

ஒரு பக்க பொருளாதார செய்திகள், அதில் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்திருப்பது, போர் அபாயம் சந்தையை பாதிப்பது என்று எழுதுகின்றனர்.

கூட்டணி விவகாரங்கள் பற்றி ஒரு பக்கம்.

“பாக் விமானத்தை விரட்டி அடித்தது எப்படி, அபிநந்தனின் சாதுர்யத்தை குறித்து பரபரப்பு தகவல் என்று ஒரு செய்தி. வாசகர் கடிதத்தில் அ.தி.மு.க தலைமையில் ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்வதாகவும், பாக்.கிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள்.

அதன் பிறகு போலீஸ் செய்திகள் ஒரு பக்கம் முழுவதும்.

அண்ணா நூலகத்தில் தனியார் நிறுவனம் நடத்திய அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது குறித்து கல்வியாளர்கள், புத்தக வாசிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்களாம். தேர்தல் பிரச்சார அரசியல் கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்திருக்கிறது. கோட்டூர்புரத்தில் உள்ள இந்த நூலகத்தில் இப்படி நடந்ததை விமர்சிக்கிறது

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?

21-ம் நூற்றாண்டின் பெரியாரிய பகுத்தறிவு பிரச்சாரம் 18 Feb 2019 12:57 AM (6 years ago)

சென்னையில் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உயர் ஆற்றல் இயற்பியல் விஞ்ஞானி அதீஷ் தாபோல்கர் "அறிவியலும் மூடநம்பிக்கையும்" என்ற தலைப்பில் அறிவியலுக்கும் (மூட) நம்பிக்கைகளுக்கும் இடையேயான உறவைப் பற்றி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி தரமணியில் உள்ள Institute of Mathematical Sciences-ல் நடைபெற்றது.



அதீஷ் தாபோல்கர் இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் நரேந்திர தாபோல்கரின் சொந்தக்காரர்தான். நரேந்திர தாபோல்கர் அதீஷ் தாபோல்கரின் அங்கிள்.

“அவர் மிகவும் பாசமான பெரியப்பா. மிகவும் உற்சாகமாக இருப்பார்.” என்றார் அதீஷ். நரேந்திர தாபோல்கர் ஒரு மருத்துவர். ஆனால், மருத்துவப் பணியுடனேயே சமூகத்தை பீடித்த பிற நோய்களையும் எதிர்த்துப் போராடினார். மகாராஷ்டிரா அந்த்ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (அநிச -ANIS) என்ற அமைப்பின் மூலம் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடி வந்தார். அவர் சொல்லிலும் செயலிலும் ஜனநாயகத்தை பின்பற்றுபவர். அவரது பேச்சுக்களில் கூட வன்முறையோ ஆத்திரமோ இருக்காது. ஆனால், பகுத்தறிவை பயன்படுத்தும்படி பிரச்சாரம் செய்த அவரது கருத்துக்களை தாங்கிக் கொள்ள முடியாத வன்முறை கும்பல் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டது. அந்த வன்முறை கும்பல் இது போன்று நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம் கல்புர்கி, கவுரி லங்கேஷ் என்ற பகுத்தறிவாளர்கள் பலரை கொலை செய்திருப்பது இப்போது தெரியவருகிறது.

நரேந்திர தாபோல்கர்
நரேந்திர தாபோல்கர் இறப்பிற்குப் பிறகு அநிச செயல்பாடுகள் முடங்கி விடும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதற்குப் பிறகு மகாராஷ்டிராவின் 10 கிளைகள், 2000 தன்னார்வலர்களுடன் அநிச எப்போதும் போல தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மராட்டிய பகுத்தறிவாளர் அகர்கர் "எது சரியானதோ அதை பேசுவது, எதை என்னால் முடியுமோ அதை செய்வது" என்ற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

"ஒரு விஞ்ஞானி என்ற முறையில் நாம் சமூகத்தில் இருந்து விலகி இருக்கிறோம். குறிப்பாக கோட்பாட்டியல் இயற்பியல் விஞ்ஞானிகள் தமது கோபுரங்களில்தான் பெரும்பாலான நேரம் குடியிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சமூகத்துக்கான நமது கடமையையும் நினைவு கூர்ந்து நிறைவேற்ற வேண்டியிருக்கிறது" என்று கூறும் அதீஷ் தாபோல்கர், 2013 ஆகஸ்ட் 20-ம் தேதி நரேந்திர தாபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தனது விஞ்ஞானி பணியிலிருந்து சில மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு அநிச-வின் நீண்ட கால குறிக்கோளான மகாராஷ்டிரா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் (மகாராஷ்டிரா நரபலி மற்றும் பிற மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் கருப்பு மேஜிக்கையும் தடுப்பதற்கும் ஒழித்துக் கட்டுவதற்குமான சட்டம் 2013) நிறைவேற்றப்படுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டார்.

"நம்பிக்கை, மூடநம்பிக்கை போன்றவை பற்றிய இது போன்ற உரைகள் பொதுவாக தத்துவ விசாரணையாக போய் விடும் அபாயம் இருக்கிறது. எனவே, இதை குறிப்பான, பருண்மையான அடிப்படையில் என் உரையை அமைத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்த உரையின் அடிப்படை இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

அதீஷ் தாபோல்கர்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அறிவியல் விசாரணை, பகுத்தறிவு, பெண்களுக்கு மரியாதை ஆகியவற்றை பேணி வளர்ப்பதை தனது வழிகாட்டு நெறிமுறைகளில் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது கருத்துரிமை, தான் நம்பும் வழிபாட்டு முறையை பின்பற்றும் உரிமை, மத உரிமை ஆகியவற்றையும் வழங்குகிறது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் இந்த இரண்டு ஒன்றுக்கொன்று முரண்படும் உரிமைகளுக்கு இடையேயான உரையாடல் மூலம் நிறைவேற்றப்பட்டது.

எது மூட நம்பிக்கை என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது? போதுமான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை நம்ப வேண்டும் என்பதை சிறிதளவு மாற்றிச் சொன்னால். ஒரு விஷயத்துக்கு எதிராக பெருமளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் கூட அதைத் தொடர்ந்து நம்புவது கூடாது என்று நான் சொல்லுவேன். இரண்டுக்கும் இடையே மிக நுணுக்கமான வேறுபாடு உள்ளது. முதல் கொள்கை எதையும் நம்புவதை நிபந்தனைக்குட்படுத்துகிறது. இரண்டாவது கொள்கை ஒரு விஷயத்தை நம்பாமல் கைவிட வேண்டியதற்கான வரையறையை முன் வைக்கிறது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா பல்வேறு தரப்பினருக்கிடையேயான விவாதங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட மேலவையில் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகிப் போனது. இதில் மிக மூத்த, மரியாதைக்குரிய நீதித்துறை அறிஞர்கள் பங்கேற்றனர். எது மூடநம்பிக்கை என்பதை வரையறுப்பதில் மிக கவனமாக செயல்பட்டனர். இந்த மசோதாவில் ஒரு இடத்தில் கூட கடவுள் என்பது வரவில்லை. 64 செயல்பாடுகளை மூடநம்பிக்கை என்று பட்டியலிட்டு அவை படிப்படியாக குறைக்கப்பட்டு 16 செயல்பாடுகள்தான் இறுதி மசோதாவில் சேர்க்கப்பட்டன.

அப்படி தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றச் செயல்கள் என்னென்ன?

அ. வெறுங்கையால் அறுவை சிகிச்சை செய்வதாக கூறிக் கொள்வது. இப்படி ஒரு சாமியார் நூற்றுக்கணக்கான சிகிச்சைகளை செய்து கொண்டிருந்தார். அவர் கட்டணமாக பணம் வசூலிப்பது இல்லைதான். ஆனால் நன்கொடை பெற்றுக் கொள்வார். அப்படி பல ஆயிரம் ரூபாய்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒரு துணியை உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் போட்டு மூடி, தனது கைகளால் சில அசைவுகளை செய்வார், எந்த விதமான காயமும் ஏற்படாது, ரத்தம் வராது. ஆனால், சிகிச்சை பெறுபவர் தான் குணமடைந்ததாக உணர்ந்து நன்கொடை கொடுத்து விட்டு போய் விடுவார். பின்னர் அவரை அந்த நோய் தாக்கி பாதிக்கப்படுவார். இதை இந்த மசோதா தடை செய்கிறது.

ஆ. ஒரு பெண்ணை சூனியக்காரி என்று பட்டம் சூட்டி கொலை செய்வது, சொத்தை பிடுங்குவது ஆகியவற்றை இந்த சட்டம் தடை செய்கிறது. சூனியக்காரி என்ற பட்டம் சூட்டுவது பெரும்பாலும் நிலவுடைமை தொடர்பான பிரச்சனைகளில் நடக்கிறது. குறிப்பாக தலித் பெண் நிலத்தையோ வேறு உரிமைகளையோ கோரும் போது அவரது எதிர் தரப்பினர் அவருக்கு சூனியக்காரி என்று பட்டம் சூட்டி விட்டால் அவர் சொல்வதை யாரும் கேட்காமல் போய் விடுவார்கள். இதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

இ. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு அதன் மூலம் பெண்களை பாலியல் ரீதியாக கேடாக பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஆசாராம் பாபு விஷயத்தில் அது அப்பட்டமான ரேப். ஆனால் பல சாமியார்களின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணே சாமியாரை ஆதரிப்பார். சாமியார் கிருஷ்ணனின் அவதாரம் என்று நம்புவார். இந்த நிலையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு போட முடியாது. மகாராஷ்டிரா மூடநம்பிக்கைகள் ஒழிப்பு சட்டம் அதற்கு வழி செய்கிறது.

ஈ. பாம்புக்கடிக்கு முறையான சிகிச்சை பெறுவதை தடுத்து மாய தீர்வு சொல்வதை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

அகில இந்திய மூடநம்பிக்கை ஒழிப்பு சங்கம்
இது போன்று 14 வகையான மோசடி செயல்பாடுகளை இந்தச் சட்டம் தடை செய்கிறது. ஒருவர் தன்னுடைய வீட்டில் கணபதி ஹோமம் செய்தால் வீடு நன்றாக இருக்கும் என்று கருதினால் அதைப் பற்றி இந்த சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது இஞ்சி டீ குடித்தால் சரியாகி விடும் என்று நம்பினால் இந்த சட்டம் அதில் தலையிடாது. குறிப்பாக, தனி மனிதர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள் பிறரை பொருளாயத ரீதியில் கேடாக பயன்படுத்தாத வரையில் அவற்றில் இந்தச் சட்டம் தலையிடப் போவதில்லை.

இப்போது நம்பிக்கை பற்றி பேசலாம்.

ஹிக்ஸ் போஸான் துகளை உருவாக்கும் ஒரு நிகழ்வு பற்றிய சித்திரம்
அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் விடை இருக்கிறது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட அளவுக்கு அறிவியலும் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. அதற்கு உதாரணமாக ஹிக்ஸ் போஸான் பற்றி சொல்லலாம். ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருக்க வேண்டும் என்று கோட்பாட்டு ரீதியாக நிரூபணம் ஆன பிறகும் அதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தொடர்பான செயல்முறை நிரூபணம் கிடைத்த பிறகுதான் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அறிவியல் விதிகள் நிகழ்தகவு அடிப்படையில் செயல்படுகின்றன. ஒரு விதி ஆகப் பெரும்பாலானா நேரங்களில் இப்படி நிகழும் என்றுதான் கணிக்க முடியும். 5-வது மாடியில் இருந்து குதித்தால் உயிருக்கு ஆபத்து என்பது அறிவியல் கோட்பாட்டிலிருந்தும் பெறப்படுகிறது. ஆனால், அது பல நூறு முறை பல நூறு விபத்துகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனாலேயே ஒருவர் அப்படி விழுந்து உயிர் தப்புவதை சாத்தியமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவ்வப்போது செய்தித் தாள்களில் அத்தகைய செய்திகளை படிக்கிறோம்.

அது போல ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலான நம்பிக்கைக்கு மதிப்பு அதிகம். தங்கத்தால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வானத்தில் பறக்கிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால், பரிணாம வளர்ச்சி பற்றி நமக்குத் தெரிந்த வரையில் குதிரைக்கு இறக்கை இருப்பதோ, பறப்பதோ சாத்தியமில்லை என்று நாம் நம்புகிறோம். மேலும், உலோகத்தில் செய்யப்பட்ட குதிரை என்பது சாத்தியமில்லை என்பது உயிரியலில் தெளிவாக தெரிய வருகிறது. எனவே, அது நிகழ்வதற்கு மிக சாத்தியக் குறைவான ஒன்று என்று நிராகரித்து விடலாம். ஆனால், அப்படி ஒரு குதிரை இல்லவே இல்லை என்று சாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆற்றல் மாறா கோட்பாடு என்பது கோடிக்கணக்கான நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே, அதை மீறுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை யாராவது சொன்னால் அதை உடனேயே நிராகரித்து விடலாம். வெறும் கையில் விபூதியை தோற்றுவிப்பேன் என்று யாராவது சொன்னால் அதை போய் ஆய்வு செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அது மோசடி என்று உடனேயே முடிவு செய்து விடலாம்.

காந்தி ராமன் பெயரால் மதக் கலவரத்தை தடுத்து நிறுத்தினார். நவகாளியில் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்தினார். அவரது நம்பிக்கையை நான் ஏன் கேள்வி கேட்க வேண்டும். ஆனால், யோகி ஆதித்யநாத் அதே ராமன் பெயரில் மசூதியை இடிக்கவோ, முஸ்லீம்கள் மீது வன்முறையை தூண்டவோ செய்தால் அதை எதிர்ப்பேன். இதுதான் தனிப்பட்ட நம்பிக்கைக்கும் சமூக ரீதியில் கேடான நம்பிக்கைக்கும் இடையேயான வேறுபாடு.

இந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் என்பது இந்து மதத்துக்கு எதிரானது என்றும், இந்தியாவுக்கு எதிரானது ஐரோப்பிய கோட்பாடுகளை தூக்கிப் பிடிப்பது என்றும் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு ஒரு நீண்ட அறிவியல் பாரம்பரியம் உள்ளது. இந்திய பாரம்பரியத்தில் லோகயதா தத்துவமும், சாருவாகன முறையும் பகுத்தறிவு, அறிவியல் முறையை பின்பற்றியவை.  பாஸ்கராச்சாரியா, ஆர்யபட்டா, மத்வாச்சாரியாவின் படைப்புகளில் நுண்கணிதத்தின் ஆரம்ப கோட்பாடுகள் காணப்படுகின்றன. சி.வி.ராமன், சந்திரசேகர் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை நாம் நிராகரிக்கிறோமா? அறிவியலில் ஐரோப்பிய அறிவியல், இந்திய அறிவியல் என்று ஒன்று இல்லை.

அதே நேரம் மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்வதில்லை. புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி லினஸ் பாலிங் சளியை சரி செய்ய வைட்டமின் சி உதவும் என்று நம்பினார். அது தொடர்பாக ஒரு புத்தகமும் எழுதினார், அதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் விஞ்ஞானிகள் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகவும் பல கோடி பேரின் கருத்தாகவும்தான் தொடர்கிறது. ஒரு உண்மையாக மாறி விடவில்லை.

கடந்த சுமார் 400 ஆண்டுகளில் மனித குலம் சாதித்துள்ள இந்த அறிவியல் பாரம்பரியம் மகத்தான ஒன்று. இது மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும். இன்றைக்கு உலகைப் பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது முன் எப்போதையும் விட அதிகம். எனவே, பல விஷயங்களில் நாம் அதிக நம்பிக்கை அளவுடன் முன் கணிப்புகளை சொல்ல  முடிகிறது.

கடவுள் என்ற கருதுகோள் மனிதன் விளக்கம் சொல்ல முடியாத விஷயங்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் கடவுள் என்ற கருதுகோள் தேவைப்படும் இடம் சுருங்கிக் கொண்டே போகிறது. கண் என்பது எவ்வளவு சிக்கலான அற்புதமான உறுப்பு, அதை யாராவது புத்திசாலிதானே படைத்திருக்க வேண்டும் என்பது கடவுள் இருப்பதற்கான ஆதாரமாக சொல்லப்படும் ஒரு வாதம். ஆனால், இன்றைக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின்படி கண் எப்படி தோன்றியது என்பதற்கு மிக எளிமையான கண்ணிலிருந்து அதிகரித்துக் கொண்டே போகும் சிக்கலிலான நூற்றுக் கணக்கான கண் வகைகள் உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, கண் என்பது பரிணாம வளர்ச்சிப் போக்கில் இந்த சிக்கலான அமைப்பை பெற்றது என்று முடிவு செய்ய முடிகிறது.

ஒரு காலத்தில் மின்னல் என்பது இந்திரன் வஜ்ராயுதத்தை பாய்ச்சுவதால் ஏற்பட்டது என்றும் மழை என்பது வருணபகவானின் கொடை என்றும் நம்பினார்கள். சூரிய பகவான் என்ற கருதுகோளை வைத்திருந்தார்கள். ஆனால், மனிதனின் அறிவு வளர வளர, இன்றைக்கு மின்னல் எப்படி ஏற்படுகிறது என்பதை துல்லியமாக புரிந்து கொண்டிருக்கிறோம். சூரியன் என்பது என்ன, அதில் எப்படி ஒளியும், வெப்பமும் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோம்.

மேலும், இந்த அண்டத்தில் பல கோடி நட்சத்திரத் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன. அவற்றில் ஒரு நட்சத்திரத் திரளின் நடுத்தர அளவிலான ஒரு நட்சத்திரமான சூரியனின் ஒரு சிறிய கோளான பூமியில் வாழும் மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய கடவுள்தான் இந்த ஒட்டு மொத்த உலகையும் இயக்குகிறார் என்பது கொஞ்சம் அதிகமாக படுகிறது. தனிப்பட்ட முறையில் நான் கடவுள் இருப்பதாக நம்பவில்லை. நீங்கள் கடவுளை நம்பினால் அதில் நான் தலையிடப் போவதில்லை. என்னுடன் வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவர் சொந்த வாழ்க்கையில் மூட நம்பிக்கைகளை பின்பற்றினால் அதில் நான் தலையிட மாட்டேன். தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியில், “என்னப்பா இங்கு முன்னேறிய அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வேலை செய்து விட்டு வெளியில் போய் இதைச் செய்கிறாயா" என்று அவரிடம் அதை விமர்சிக்கலாம். அதற்கு மேல் நான் போக முடியாது.

மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை பொறுத்தவரை அது அந்த மாநிலத்துக்கு மட்டுமானது. இது போன்ற மோசடி பேர்வழிகள் பேசாமல் இடத்தை மாற்றிக் கொள்கிறார்கள். உதராணமாக, அந்த அறுவை சிகிச்சை பேர்வழி (அவர் ஒரு முஸ்லீம்) கர்நாடகாவுக்கு மாறிப் போய் விட்டார். எனவே, இது போன்ற நாடு தழுவிய சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. இப்போது கர்நாடகாவும் அத்தகைய சட்டத்தை இயற்றி விட்டது.
நாடு தழுவிய சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றம், மகாராஷ்டிராவின் அநிச போன்ற தோழமை அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் கேள்வி கேட்கும் உணர்வை பரப்ப வேண்டும். மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அறிவியலில் நமக்குத் தெரியாத, நாம் ஈடுபடாத துறை பற்றி கருத்து சொல்லும் போது ஒரு பணிவு வேண்டும். நான் ஒரு கோட்பாட்டியல் இயற்பியலாளராக இருந்த போதும் இன்னொரு துறை பற்றி கருத்து சொல்லும் போது கவனமாகத்தான் சொல்வேன்."

விஞ்ஞானி ஒருவர் தான் வாழும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அது போன்று முகம் கொடுக்கப்பட வேண்டிய பிரச்சனையாக அவர் கருதுவது என்ன என்பதையும், அறிவியல் - நம்பிக்கை - மூட நம்பிக்கை இவற்றுக்கிடையேயான உறவு என்ன என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த உரை உதவியாக இருந்தது.

அதீஷ் தாபோல்கர் இத்தாலியின் திரிஸ்தே நகரில் உள்ள அப்துஸ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையத்தின் "உயர் ஆற்றல் இயற்பியல் மற்றும் அண்டவியல்" துறைத்தலைவராக பணியாற்றும் விஞ்ஞானி.

குவாண்டம் கருந்துளைகள் பற்றியும், ராமானுஜனின் படைப்புகளுடன் அதற்கு இருக்கும் தொடர்பு பற்றியும் ஆய்வு செய்பவர்.

ஐ.ஐ.டி கான்பூர் முதுகலை பட்டம் பெற்று பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஜெஃப் ஹார்வி என்ற பேராசிரியரின் வழிகாட்டலில் பி.எச்.டி பட்டம் பெற்றார். ரட்ஜர்ஸ், ஹார்வர்ட், கால்டெக் போன்ற கல்வி நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றிய பிறகு 1996-ம் ஆண்டு டாடா அடிப்படை ஆய்வு கழகத்தில் 2010 வரை விஞ்ஞானியாக பணியாற்றினார். இழை (ஸ்டிரிங்) கோட்பாட்டில் மீசீர்மை (super symmetry) தீர்வுகள் தாபோல்கர்-ஹார்வி நிலை என்று அறியப்படுகிறது.

இது தொடர்பான ஒரு செய்தி

Atish Dabholkar calls for law against superstition

Add post to Blinklist Add post to Blogmarks Add post to del.icio.us Digg this! Add post to My Web 2.0 Add post to Newsvine Add post to Reddit Add post to Simpy Who's linking to this post?